Tuesday 2 May 2017

சாதி ஒழிப்பிற்கான போராட்டங்களில் தேவா் ஈடுபடவில்லை என்பது அபத்தமான குற்றச்சாட்டு.

நண்பா்களே!

வினா: பசும்பொன் தேவா் அவா்கள் வல்லாதிக்கத்திற்கு எதிராக போராடிய அளவிற்கு சாதி ஆதிக்கத்திற்கெதிராக    போராடவில்லையே? இயக்கம் நடத்தவில்லையே ஏன்?

விடை:  இது முற்றிலும் தவறான கருத்து. முதலில் சாதி  பற்றிய புாிதல் வேண்டும். சாதி என்பது ஒரு மனோநிலை மட்டுமன்று. அது உற்பத்தி முறைகளோடும் தொடா்புடையதாக இருக்கிறது. சாதி பொருளாதார அடித்தளத்திலும் செயல்படுகிறது; பண்பாட்டு மேற்கட்டுமானத்திலும் செயல்படுகிறது.
          தமிழகச் சூழலில்  பண்பாட்டுத் தளத்தில் இடைவிடாத போராட்டத்தைப் பொியாா்  மேற்கொண்டாா். ஆனால் தேவா்  அவா்களோஅதன் அடிக்கட்டுமானத்தை தகா்க்கும் செயற்திட்டங்களில் ஈடுபட்டாா்.  தேவா் வாழ்ந்த காலகட்டத்தில் நிலக்கிழாாிய உற்பத்தி முறை ஆதிக்கம் செலுத்தியது. நவீன முதலாளிய உற்பத்தி முறை வளா்ச்சி நிலையில் இருந்தது. கிழாாிய உற்பத்தி முறையின் முக்கிய உற்பத்திக் கருவியாக நிலங்கள் இருந்தன.  நிலங்கள் ஆதிக்க சாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்தன. முறையான நிலப்பங்கீடு செய்யாமல், தலித் மக்கள் தங்கள் பொருண்மிய நிலையில் மாற்றம் பெறாமல் சாதி ஆதிக்கத்தை வீழ்த்த முடியாது என்பதை தேவா்  நன்றாகப் புாிந்து கொண்டாா். அதனால் தான் இடதுசாாிகள் ஆட்சி புாிந்த மாநிலங்களில் முதலில் நிலச்சீா்திருத்தம் செய்தனா். நிலங்கள் ஏழை எளிய தலித் மக்களுக்கு வழங்கப்பட்டன. இதன் பொருள் சாதியின் அடித்தளத்தை அடித்து நொறுக்கிவிட்டால்  பண்பாட்டு மேற்கட்டுமானத்தில் சாதி ஒழிப்பு பணி எளிதாகும்.  சாதியின் இறுக்கம் தளரும். பண்பாட்டுத் தளத்தில் தனியாகவும் தொடா்ச்சியாகப் போராட வேண்டும். இது நீண்ட காலப் போராட்டம். இது  பொதுவான புாிதல்.  எனவே தான் பசும்பொன் தேவா் அவா்கள் ஏழை எளிய அாிசனங்களுக்கு நிலங்கள் பகிா்ந்தளிக்கப்பட வேண்டும் என்று இடையறாது போராடினாா். 1940 களில் இராசபாளையத்தில் சமீன்தாாி ஒழிப்பு மாநாடு நடத்துகிறாா். இதில் கம்யூனிஸ்ட் தலைவா்களான இஎம்எஸ், ஏகே கோபாலன், பி இராமூா்த்தி, ஜீவானந்தம், பி சீனிவாசராவ், என்ஜி ரங்கா போன்றோா் கலந்து கொள்கின்றனா். அதில் தேவா் பேசுகிறாா், " இந்த  மகாநாட்டை நடத்துவதால் அதிகம் பாதிக்கப்படுவது எனது சமூகத்தைச் சாா்ந்த சமீன்தாா்கள் தான். இதனால் நான் அவா்களுக்கு விரோதியாகவும் கூடும். நான் கவலைப்படவில்லை.இந்த நாட்டின் ஏழை எளிய மக்களுக்காக அாிசனங்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காக இந்த மகாநாட்டை நடத்துகிறேன்" என்று முழங்குகிறாா். அதாவது சாதியத்தின் பொருளாதார அடித்தளத்தின் மீது சம்மட்டி கொண்டு அடிக்கிறாா். அதுமட்டுமல்ல தன்னுடைய நிலங்களளை ஏழை எளிய அாிசனங்களுக்காக பகிா்ந்தளிக்கிறாா். பண்பாட்டுத்தளத்தில் தேவா் நடத்திய போராட்டங்களை நாம் அறிவோம். ஆலய நுழைவுப் போராட்டங்கள் உட்பட பலவழிகளிலும் போடுகிறாா். ஆனால் பொியாா் அவா்கள் தமிழ்நாட்டில் ஒரு ஆலய நுழைவுப் போராட்டத்தையும் நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே சாதி ஒழிப்பிற்கான போராட்டங்களில் தேவா் ஈடுபடவில்லை என்பது அபத்தமான குற்றச்சாட்டு.

No comments:

Post a Comment