Wednesday 3 May 2017

தேவர் மறைவு தந்தை பெரியார் விடுத்த இரங்கல் செய்தி:

பசும்பொன் தேவர்  இறந்ததற்கு தந்தை பெரியார் விடுத்த இரங்கல் செய்தி: "திரு. முத்துராமலிங்கத் தேவர் நாட்டுக்காகப் பெருஞ்சேவை செய்தவர். தனக்காக எதையுமே எதிபாராதவர் - தைரியசாலி - மறைக்காமல் உண்மையை வெளியிடுபவர் - நல்ல தியாகி - அவரது வீரப்பேச்சுகளால் எத்தனையோ தியாகிகள் உண்டானார்கள். அவரது சேவையால் நாடு நலம் பல பெற்றது. அவர் மறைந்து விட்டார். அவரை நிகர்த்த சுத்தமான பெருந்தலைவர்கள், தமிழ்நாட்டில் மிக அரிதாகத்தான் பிறக்கிறார்கள். அவரை  இழந்து விட்டது நாடு - அதை ஈடு செய்வது கடினம். .

No comments:

Post a Comment