Monday 18 September 2017

நீதியில் மறவன்

கவியரசு கண்ணதாசன் அவா்கள் பசும்பொன்  தேவா்  அவா்களைப் பற்றி எழுதிய ஒரு கவிதை .

"நீதியில் மறவன்; நல்ல
நோ்மையில் மறவன்;  நாட்டில்
ஆதிநாள் தொட்டே போாில்
அருஞ்செயல் புாிந்த செம்மல்;
சாதியில் மறவன்; எங்கள்
தமிழ்முத்து ராமலிங்கம்!
வாதிடும் திறமைக் கெல்லாம்
வரலாற்றில் ஒருவன் அன்னான்!

நல்லறம் வளா்த்துக் காத்த
நைச்டிக பிரம்மச் சாாி!
இல்லறம் இல்லை; ஆனால்
ஏற்காத அறமே இல்லை!
கல்லையும் பணியச் செய்யும்
கனிவுறும் அறத்தில் மிக்க
வல்லவன் பசும்பொன் நாதன்
வளா்புகழ் வளா்க மாதோ!"

Friday 15 September 2017

காமராஜர் நடத்திய படுகொலைகள்

மருதுபாண்டியன் இரா.


1957 செப்டம்பர் 14  கீழத்தூவவில் ஐவர்  போலீசாரால் சுட்டுப் படுகொலை  செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து கீரந்தை, உளுத்திமடை,  மழவராயனேந்தல் என்று பல கிராமங்களிலும் சனங்கள் போலீசாரால் சுட்டுப் படுகொலை செயப்பட்டனர். இந்தப் படுகொலைகள் அனைத்தும்  கருணை மிகு கர்ம வீரர் காமராசர் ஆட்சியிலே தான் நடந்தது . மொத்தம் 17 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஏன் இந்தப் படுகொலை . எதற்காக காக்கை குருவி போல் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஒற்றை வரியில் சொல்வதென்றால் இவர்கள்  காங்கிரசுக்கு எதிரானவர்கள். காமராசருக்கு எதிரானவர்கள். இவர்கள் அனைவரும் பார்வர்ட் பிளாக் கட்சியைச் சேர்ந்தவர்கள். 14 பேர் மறவர்கள். இருவர் அகமுடையார். ஒருவர் அரிசன் - குடும்பர். இந்த அரச பயங்கரவாதத்தைப் பற்றி  விரிவாகப் பார்ப்போம்.

முதுகுளத்துார் சமாதான மாநாடு முடிந்த மறுநாள் 1957 செப்.11 ம் நாள் இரவு காங்கிரஸ்காரரான இமானுவேல் கொலை செய்யப்படுகிறார். இதையொட்டி கலவரம் வெடிக்கும் என ஆட்சியாளர்கள் எதிர்பார்த்து ஏமாற்றமடைந்தனர். கலவரம் நிகழ்த்தப்பட்டால் அதைக் காரணமாக வைத்து பசும்பொன் தேவரை கைது செய்ய காமராசர் அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால் இந்தப் படுகொலைக்கும் தேவருக்கும் சம்மந்தம் இல்லை என இமானுவேலின் சகோதரர் துரைராஜ் பிரச்சாரம் செய்து வந்தார். மேலும் 1985 வரை அந்தப் பகுதியின் பார்வர்ட் பிளாக் கட்சி நிர்வாகியாகவே இமானுவேலின் சகோதரர் துரைராஜ் செயல்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  இமானுவேலின் மைத்துனர், அமிர்தம் கிரேசு அம்மையாரின் சகோதரரும் 80கள் வரை பார்வர்ட் பிளாக் கட்சியில் பணியாற்றிக் கொண்டு தான் இருந்தார்.

இந்நிலையில் 1957 செப்டம்பர் 14 -ம் நாள், அப்போதைய தமிழக முதல்வர் காமராஜர் மதுரைக்கு வந்தார். தொடர்ந்து மூன்று நாட்கள் மதுரையில் தங்கியிருந்தார். மதுரைக்கு வந்த முதல் நாளே, ஐ.ஜீ மற்றும் மாவட்ட காவல் துறையினர் உட்பட காவல்துறை அதிகாரிகளைக் கலந்து பேசினார்.
இன்ஸ்பெக்டர் “ரே” என்பவரை கொலை வழக்கை விசாரிக்க  போலீஸ் பட்டாளத்தையும் கீழ்த்தூவல் கிராமத்துக்கு அனுப்பி வைத்தனர்.அதன் ஒரு கட்டமாக, 1957 செப்டம்பர் 14ம் நாள் முதுகுளத்தூர் அருகே உள்ள  கீழத்தூவல் கிராமத்திற்குள் புகுந்தனர் காவல் துறையினர்.

கீழ்த்தூவலுக்குப் போன இன்ஸ்பெக்டர் “ரே” அமைதியாக இருந்த கீழ்த்தூவல் கிராமத்து மக்களை அடித்துத் துன்புறுத்தி, அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து, வயது வந்தவர்களைத் துன்புறுத்தி, அவர்களைப் பிடித்து ஒரு பள்ளிக் கூடத்தில் அடைத்து வைத்தான்.

முதுகுளத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜ் அய்யர், குறிப்பிட்ட தவசியாண்டி தேவர் , சித்திரைவேலு தேவர், ஜெகநாதன் தேவர், முத்துமணி தேவர், சிவமணி தேவர்  என்ற ஐந்து இளைஞர்களை மட்டும் வெளியே இழுத்து வந்தார். அவர்களை ரத்த வெறி பிடித்த இன்ஸ்பெக்டர் “ரே” தன் பரிவாரங்களோடு கிராமத்தை ஒட்டி உள்ள கண்மாய் கரைக்குக் கூட்டிச் சென்றான்.

அங்கே, கண்மாய்க் கரைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அந்த ஐந்து வாலிபர்களின் கைகளையும் கால்களையும் பின்பு கண்களையும் கட்டினார்கள். என்ன நடக்கப்போகிறதோ…? என்று அறியாமல் கைகளும் கால்களும், கண்களையும் கட்டி கருவேல மரத்தில் ஐவரையும் கட்டி வைத்து கட்டிளம் காளையர்கள் ஐவரும் அச்சத்தோடு திகைத்து நின்ற வேளையில் சுட்டுக் கொன்றார்கள்.துப்பாக்கியின் வெடிச்சத்தம் கேட்டு, பள்ளியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அனைவரும் பதறித்துடித்துக் கோவெனக் கதறி அழுதனர்.

என்ன நடந்த அங்கே…? ரத்த வெறி பிடித்தஇன்ஸ்பெக்டர் “ரே” , அந்த இளைஞர்களின் நெஞ்சில் துப்பாக்கியால் வெறிகொண்டு சுட்டு, அந்த ஐந்து பேருடைய உயிரைப் பலிவாங்கினான்.சுட்டப்பட்ட இந்த ஐவரும்  பிணமாக, ரத்த வெள்ளத்தில் விழுந்த பின்னும் வெறி பிடித்த மிருகம் போல்  இன்ஸ்பெக்டர் ரே, யின் துப்பாக்கி வெடிச்சத்தம் முழங்கிக் கொண்டு இருந்தது. கீழத்தூவல் கண்மாய் இரத்தத் தடாகமாக மாறியது.

அந்த ஐந்து இளைஞர்கள் செய்த குற்றம் என்ன…? எதற்கு இவ்வளவு கொடிய தண்டனை…? முத்துராமலிங்க தேவரைத் தலைவராக  ஏற்றுக் கொண்டு, பார்வர்ட் பிளாக் கட்சிக்கு ஓட்டு அளித்தது தான் அவர்கள் செய்த குற்றம். இந்த குற்றத்திற்காக தான், அந்த ஐந்து அப்பாவி இளைஞர்களை சுட்டு கொன்றனர்.இறந்த இளைஞர்களின் உடல்களை அவர்களது மனைவிமார்களும் குழந்தைகளும் கூடப் பார்க்க அனுமதி மறுக்கப்பட்டது.

இறந்த ஐந்து இளைஞர்களின் உடல்களை உடனே பரமக்குடிக்குக் கொண்டு சென்று, பிரேத பரிசோதனை நடத்திய பின் ரகசியமாய் போலீசாரே எரித்து விட்டனர். கீழத்தூவல் படுகொலையோடு நின்று விட்டதா, நிலைமை…? இல்லை. காங்கிரஸ் வெறியாட்டமும் போலீசின் காடடுமிராண்டித்தனமும் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியது. கீரந்தை என்ற கிராமத்திற்குள் போலீஸ் வெறிப்பட்டாளம் நுழைந்தது. அக்கிராம மக்களில் சிலர் ஒரு சடங்கு வீட்டிலே விருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். போலிஸ் பட்டாளம் அந்த வீட்டினுள் நுழைந்த விருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களில் ஏழு பேர்களை விட்டுவிட்டு வெளியே இழுத்துக் கொண்டு வந்தனர்.அவர்களின் குழம்பு பிசைந்த கரங்கள், அதில் ஒட்டியிருந்த பருப்பு உலராத நிலையில், அவர்களைச் சுட்டுக் கொன்றனர். அந்தப் பிணங்களை பக்கத்தில் இருந்த வைக்கோல் போரில் தீ வைத்து, அதில் தூக்கிப் போட்டு எரித்தனர். அந்த ஏழு பேரில் ஒருவர் கிழவக் குடும்பன் என்ற அரிஜன். அவர் மறவர்களுக்கு ஆதரவாக இருந்ததால் அவரும் கொல்லப்பட்டார். இவர் பார்வர்ட் பிளாக் தொண்டர்.

மேலும் நரிக்குடிப் பக்கம் உள்ள பனைக்குடி, சிறுவார் என்ற கிராமங்களில் இருந்தவர்களை மலஜலம் கூடக் கழிக்க விடாமல், போலிஸ் லாரியிலேயே வைத்திருந்தனர். மறுநாள் அவர்களை உளுத்திமடை என்ற கிராமத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு போனதும், லாரியில் இருந்தவர்களில் நான்கு பேர்களைக் குறிப்பிட்டு, ” உங்களை விடுதலை செய்து விட்டோம்; போகலாம்” என்று அவர்களிடம் போலீசார் கூறினர்.

அந்த அப்பாவிகள் நான்கு பேரும் போலீசார் சொன்னதை நம்பி, லாரியில் இருந்து இறங்கினர். தங்கள் ஊரை நோக்கி நடை போடத் தொடங்கினர்.போலீஸ் வெறியர்கள் பின்னால் இருந்து அவர்களது முதுகுப்புறமாக அந்த நான்கு பேரையும் சுட்டுக் கொன்றனர். இத்தோடு நின்று விட்டதா, போலிஸ் அட்டூழியம்…? மழவராயனேந்தலில் ஒருவரைச் சுட்டுக் கொன்றனர்.

கீழத்தூவல், கீரந்தை உளுத்தி மடை, மழவராயனேந்தல் ஆகிய ஊர்கள் மொத்தம் பதினேழு பேர்களைச் சுட்டுக் கொன்றனர். அதில் ஒருவர் அரிஜன், இருவர் அகம்படியர். இப்படியாக பதினேழு பேரைப் பலி வாங்கியதோடு காங்கிரஸ் அரசின் வெறித்தனம் நின்று விட்டதா…? இல்லை. ஐயாயிரம் பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்கள் மீது 836 பொய் வழக்குகள் போடப்பட்டன. இந்தக் கொலைகளைச் செய்ததற்காக இன்ஸ்பெக்டர் ரேவிற்கு காங்கிரஸ் கட்சி பொற்கிழி வழங்கியது. இதே இன்ஸ்பெக்டர் "ரே " தான் கேரளாவில்  கண்ணனூர் மாவட்டத்தில்  கம்யூனிஸ்டுகளைப் படுகொலை செய்தவன்.

இந்தப் படுகொலைகளனைத்தும் ஏழைப் பங்காளர்  காமராசர் ஆட்சியிலே, அவரது ஆணையின் பேரிலேயே நடைபெற்றது. படுகொலைகள் காமராசர் ஆட்சியில் புதிதல்லவே! இந்தக் கொலைகளுக்கு முன்னால் 1957 ஜனவரியில் கூலி உயர்வு கேட்டுப் போராடிய வால்பாறைத்
தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் ஐவரையும் சுட்டுக் கொன்றது காமராசரின் கருணை மிகு ஆட்சி.

அரசியல் செல்வாக்கையும் , ஆட்சியதிகாரத்தையும் பயன்படுத்திக் கொண்டு எதிர்க் கட்சிகளை நசுக்கும் கொடிய ஆட்சியாக காங்கிரஸ் காட்டுத் தர்பார் நடத்தியது. அந்தப் பகுதியிலே பார்வர்ட் பிளாக் செல்வாக்கைக் குறைப்பதற்கும், பசும்பொன் தேவரின் மீது பொய் வழக்குப் போட்டு அச்சுறுத்தவே இந்தப் படுகொலைகள் நிகழ்த்தப்பட்டன.

படுகொலை செய்யப்பட்டவர்கள் :

கீழத்தூவல் படுகொலை 1957 செப் - 14
1. வழிவிட்டாத்தேவர் மகன் தவசி யாண்டித்தேவர்
2. கருப்பசாமித்தேவர் மகன் சிவமணித்தவர்
3. முனியாண்டித் தேவர் மகன் சித்திரை வேல் தேவர்
4. ராமசாமித்தேவர் மகன் ஜெகநாதத்தேவர்
5. சோலை முனியாண்டித் தேவர் மகன் முத்துமணித்தேவர்

கீரந்தைப்படுகொலை செப் - 17, 1957

1. குருவலிங்கத் தேவர் மகன் குமாரசாமித்தேவர், சாத்தங்குடி
2. வெள்ளைச்சாமித்தேவர் மகன் ஆறுமுகத் தேவர், அரியநாதபுரம்
3. தவசியாண்டித் தேவர் மகன் சேதுத் தேவர், அரியநாதபுரம்
4 . முனியாண்டிக் குடும்பன் , கடுகு சந்தை
5. வேலுச்சாமித்தேவர் மகன் குருநாதர் தேவர், கீரந்தை (மருத்துவமனை சிகிச்சை பெற்றும் பலனளிக்காமல் இறந்தார்)

உளுத்திமடை படுகொலை, செப் 18, 1957

1. முத்துச் சாமித்தேவர் மகன் கருப்பசாமித்தேவர்

காமராசரின் அரச பயங்கரவாதத்திற்கு பலியான அப்பாவி மக்களுக்கு வீர வணக்கம்.

மருது பாண்டியன்
சோசலிச மையம்
7550256060

குறிப்புதவி நூல்கள் :
முடிசூடா மன்னர் முத்துராமலிங்கத் தேவர். ஏ.ஆர். பெருமாள்
பொக்கிசம், க. பூபதிராஜா


Tuesday 12 September 2017

முத்துராமலிகத்தேவர் திருக்கோவில்

முத்துராமலிகத்தேவர் திருக்கோவில்

இராமநாதபுரம் மாவட்டத்தில் பசும்பொன் எனும் கிராமத்தில் உள்ளது இத்திருத்தலம். 1908 - 1963 தேவர்சுவாமிகள் வாழ்ந்த காலம். இளம் வயது முதலே ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார் . அதிதீவிர முருக பக்தர் இவர். மிகச்சிறந்த ஆன்மீக சொற்பொழிவு பல நிகழ்த்தியுள்ளார். இவர்  நிகழ்த்திய வள்ளலார் பற்றிய சொற்பொழிவை நூலாக வெளியிட்டுள்ளனர் வள்ளலார் பக்தர்கள். திருச்செந்தூர், பொள்ளாச்சி குடலுருவி மாரியம்மன் கோவில் மற்றும் கேரளா என பல இடங்களில் ஆற்றிய சொற்பொழிவுகள் புகழ்பெற்றவைகளாகும். ஆன்மீகத்தை விஞ்ஞானதோடு தொடர்படுத்தி பேசுவது இவரின் தனிச் சிறப்பு. அர்த்தமுள்ள இந்துமதம் எனும் நூலில் கண்ணதாசன் பசும்பொன் தேவரை நான் அறிந்த வரையில் உண்மையான, ஒழுக்கமான, பிரமச்சாரி
உண்டென்றால் அது உத்தம சீலர் பசும்பொன் தேவர் அவர்கள்
மட்டுமே" எனக்குறிப்பிட்டுள்ளார்.
தீவிர வள்ளலார் பற்றாளரான தேவர் வீட்டில் வள்ளலார் பூஜை இன்றளவும் உள்ளது. தனது கடைசி காலத்தில் மதுரை திருநகரில் வாழ்ந்து அங்கேயே மறைந்தார்.பிறந்த நாளிலேயே 1963ம் ஆண்டு சித்திடைந்த சித்தர் தேவர். தான் இறக்கப்போகும் நாளை முன்னரே கணித்துக் கூறியதுடன் பசும்பொன் கிராமத்தில் அடக்கம் செய்யுமாறு கூறிவிட்டு மறைந்தார். வல்லநாடு சித்தர் சாதுசிதம்பர சுவாமிகள் பசும்பொன் வந்து தேவருக்கு வள்ளலார் முறைப்படி ஜீவசமாதி நிலை அமைத்தார். தொடர்ந்து மண்டலபூஜை நடைபெற்று 1963 டிசம்பர் 5தேதி பக்தர்களால் குருபூசை விழா நடைபெற்றது.  வல்லநாடு சித்தர் தொடர்ந்து 12ஆண்டு குருபூசையில் கலந்துகொண்டு பூஜை நடத்தினார். அதன் பிறகு தமிழக அரசே இவ்விழாவை தொடந்து நடத்துகிறது. வள்ளலார் பற்றாளரான தேவர் குருபூசையில் பல லட்சம் பேருக்கு அன்னாதானம் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவது அதை உறுதிசெய்கிறது.

அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க...

******************************************

நான் எடுத்த புகைப்படங்கள்

நெல்லையப்பர் கோவில்

தமிழனே உலகின் மிகச் சிறந்த திறமை மிகுந்த படைப்பாளி என்பதற்கு தமிழக கோவில்களே சாட்சி
"""""""""""#நெல்லையப்பர்_கோவில்""""""""""

ஸ்ரீ காந்திமதி நெல்லையப்பர் ஆலயம் தென் வடலாக 756 அடி நீளமும், மேற்கு கிழக்காக 378 அடி அகலமும் கொண்டு ஆசியாவிலேயே மிகப்பெரிய சிவாலயமாக உள்ளது. அம்பாளுக்கும் சுவாமிக்கும் தனித்தனியே கோவில்கள் எழுப்பப்பட்டு, இடையே அழகிய கல் மண்டபம் கொண்டு இணைக்கப்பட்டுள்ளது. அம்பாள் சன்னதியில் ஆயிரம் கால் மண்டபம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. கோயிலில் நுழைந்தவுடன் 10 அடி உயரத்திற்கு மேலாக ஒரு அழகான வெள்ளை நிற நந்தி சிலை உள்ளது.
கொடிமரத்தைச் சுற்றிவிட்டு உள்ளே சென்றால் மூலவர் சிலை உள்ளது. அதற்கு முன்பு மிகப்பெரிய ஆனைமுகன் சிலை உள்ளது. சுமார் 9 அடி இருக்கும். மூலவரைச் சுற்றி 3 பிரகாரங்கள் உண்டு. முதல் பிரகாரத்தில் எல்லாக் கோயில்களையும் போல தக்ஷிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், மகிஷாசுரமர்த்தினி, பைரவர் சன்னிதிகள் அமைந்துள்ளன. கோவிந்தப் பெருமாள், சிவனுக்கு அருகிலேயே சயனித்திருப்பார். இது சைவ வைணவ ஓற்றுமைக்கு ஓர் எடுத்துக்காட்டு.

நெல்லையப்பர் கோவில் பிரகாரத்திலுள்ள இசைத் தூண்கள்
இரண்டாவது பிரகாரம் சற்றுப் பெரியது. ஆரம்பத்திலேயே “ஏழிசை ஸ்வரங்கள் இசைக்கும் தூண்கள்” உள்ளன. இவற்றைத் தட்டிப் பார்த்தால் ஸ்வரங்களின் ஒலி கேட்கும். இந்தப் பிரகாரத்தில்தான் “தாமிர சபை” உள்ளது. 63 நாயன்மார்களின் சிலைகள், அஷ்ட லக்ஷ்மி, சனீஸ்வரர், சகஸ்ரலிங்கம் ஆகிய சிலைகளும் இருக்கின்றன.

தாமிர அம்பலம்
மூன்றாவது பிரகாரம் மிகப் பெரியது. மிக அகலமானது. இப்பிரகாரத்திலிருந்து அம்மா மண்டபம் வழியாக அம்மன் சந்நிதி செல்வதற்கு வழி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஆஞ்சநேயர், ஐயப்பன், மஞ்சனத்தி அம்மன், சரஸ்வதி, பிரம்மா ஆகியோர்க்கு தனிச் சந்நிதிகள் உண்டு. கோயிலின் உள்ளே மிகப் பெரிய உள் தெப்பம் ஒன்று உள்ளது. இதுபோல் கோயிலுக்கு வெளியே அரை கிலோமீட்டர் தூரத்தில் வெளித்தெப்பம் ஒன்றும் உள்ளது.

நான் எடுத்த புகைப்படங்கள்

வைகுண்டநாதர் கோவில்

"""""""""""""""""#வைகுண்டநாதர்_கோவில், „„„„„„„„„„„„„„„„„„„„ஸ்ரீவைகுண்டம்„„ „„   „ „

பிரம்ம தேவனிடமிருந்து அசுரன் சோமுகன் வேதங்களைத் திருடிச் சென்றுவிட, பிரம்மா விஷ்ணுவிடம் உதவி வேண்டுகிறார். தாமிரபரணிக்கரையில் உள்ள கலசதீர்த்தத்தில் நீராடி வைகுண்டத்திலுள்ள நாராயணனை நோக்கி அவர் தவம்புரிய, நாராயணனும் வேதங்களை மீட்டு அவருக்கு உதவும்பொருட்டு, அதே தலத்தில் வைகுண்டநாதராய் எழுந்தருளினார் என்கிறது இக்கோவிலின் தலபுராணம்.

நான் எடுத்த புகைப்படம்

மதுரை மீனாட்சி அம்மன்

""""""""""""""மதுரை மீனாட்சி அம்மன் """""'""

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இக்கோயில் எட்டு கோபுரங்களையும் இரண்டு விமானங்களையும் உடையது. இங்குள்ள கருவறை விமானங்கள், இந்திர விமானம் என்று அழைக்கப்படுகிறது. 32 சிங்கங்களும், 64 சிவகணங்களும், 8 வெள்ளை யானைகளும் இந்த கருவறை விமானங்களைத் தாங்குகின்றன.

இத்திருக்கோயில் கிழக்கு மேற்காக 847 அடியும், தெற்கு வடக்காக 792 அடியும் உடையது. இக்கோவிலின் ஆடி வீதிகளில் நான்கு புறமும் ஒன்பது நிலைகளை உடைய நான்கு கோபுரங்கள் மிக உயர்ந்த நிலையில் இருக்கிறது. இவற்றுள் கிழக்குக் கோபுரம் கி.பி. 1216 முதல் 1238 ஆண்டுக்குள்ளும், மேற்குக் கோபுரம் கி.பி. 1323 ஆம் ஆண்டிலும், தெற்கு கோபுரம் கி.பி. 1559 ஆம் ஆண்டிலும், வடக்குக் கோபுரம் கி.பி. 1564 முதல் 1572 ஆம் ஆண்டிலும் கட்டப்பெற்று முடிக்கப்பெறாமல், பின்னர் 1878 ஆம் ஆண்டில் தேவகோட்டை நகரத்தார் சமுதாயத்தைச் சேர்ந்த வயிநாகரம் குடும்பத்தினரால் முடிக்கப்பட்டதாகவும் வரலாறு கூறுகிறது. இவற்றுள் தெற்குக் கோபுரம் மிக உயரமானதாகும். இதன் உயரம் 160 அடியாக இருக்கிறது.

மீனாட்சி அம்மன் கோபுரம் காளத்தி முதலியாரால் கி.பி. 1570-ல் கட்டப் பெற்று  பின்பு சிவகங்கை அரசர் சண்முகத்தால் திருப்பணி செய்யப் பெற்றது. சுவாமி கோபுரம் கி.பி. 1570 ஆம் ஆண்டில் கட்டப் பெற்று திருமலைகுமரர் அறநிலையத்தால் திருப்பணி செய்யப் பெற்றது. இக்கோயிலினுள் ஒரு ஏக்கர் பரப்பளவில் பொற்றாமரைக்குளம் அமைக்கப்பட்டுள்ளது.

நான் எடுத்த புகைப்படம்.

Monday 11 September 2017