Wednesday 13 March 2024

ஃபார்வர்டு பிளாக் மொக்கையன் MLA

தேவர் புகழ் பாடகர், ,குறுவிவசாயி, ஃபார்வர்டுபிளாக் தோழர்,
கட்டபொம்மன் நாடகத்தில் கட்டபொம்மனாகத் தோன்றி நடிப்பார்.
நாடக நடிகர்கள் திரையினுள் இருந்த மேடைக்கு வரும்போது இறைவணக்கம் பாடி வருவது வழக்கம்.

   தோழர் மொக்கையன்
"காரிருள் தான் சூரியனை மறைப்பதுண்டோ 
கறைச்சேற்றால் தாமரையின்
வாசம்போமோ 
முறையற்றார் தம்பேச்சால் 
நேதாஜி,தேவர் புகழ் போமோ "
       என்று பாடி வருவார்.
நாடக சரித்திரப்பாடல் பாடி முடிந்ததும்,
" அதிவீராமபாண்டிய அரசகுலமணியே 
  அதிசயமானமரபுதந்த அறிவுச்சுடர்மணியே 
செம்பிய சோழர்குல செழும்பொன்மணியே
விசும்பூண் பாண்டிய வெற்றிக்குலமணியே 
பசும்பொன் நகர்தந்த 
முத்துராமலிங்கமணியே
    என்ற தொகையறாவுடன் 
தித்திக்கும் தமிழ் தத்துவமெல்லாம் 
கற்றுத் தெளிந்த தங்கம் 
சித்தியுடன் நறுமுத்தியளித்திடும் 
செந்தமிழ்முருகா என்கும் 
தேவர் எங்கே முருகா
பழனிமுருகா திருமுருகா 
           என்று தொடங்கும் பாடலைப்பாடுவது வழக்கம்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் தேவர் திறக்கக்கோரிப் பாடிய பாடலும் இது தான்.
       " இருள் அற இந்தியா
        ஒளிபெற தீபமாய்
         திருமகன் நேதாஜிபாபு வந்திடுவார்"
          " கொடிபாரம்மா கொடிபாரு
            பார்வர்ட்பிளாக்கு கொடிபாரு"
"கைக்கூலி கைக்கூலி
காங்கிரஸுக்காரனெல்லாம் கைக்கூலி"
 "ரெட்டமாட்டுக்காரா ஓன்
குட்டுவெளுத்துப் போச்சுதடா "
 போன்ற  பாடல்கள்  திரும்பத் திரும்ப பாடச்சொல்லிக்  கேட்கும் பாடலாகும்.
       1957செப்டம்பர் 28 தமுக்கத்தில் நடந்த காமராஜ் எதிர்ப்பாளர்களின்
காங்கிரஸ் சீர்திருத்தக்கட்சி மாநாட்டில்
தேவரவர்கள் தனது உரையைத் தொடங்குவதற்கு முன்பாக
" அற்பர்களின் ஆட்சியினாலே
  அவதிப்படுகிறோம் 
  தமிழ்நாட்டிலே
  சூழ்ச்சியாகவே 
  பலதிட்டங்கள் தீட்டி
  சுட்டுக் கொல்கிறார் உயிர்களை"
      என்ற பாடல் அன்றைய ஆட்சியாளர்கள் மீது அறம்பாடியதாகவே அமைந்திருக்கும்.
        மொக்கையன் உசிலம்பட்டி தொகுதியில் செல்லம்பட்டி ஒன்றியத்தில் நாட்டாமங்கலம் ஐயம்பட்டியைச் சேர்ந்தவர்.
அருந்ததியர் இனத்தைச் சேர்ந்தவர்.
1962ல் ஆண்டிபட்டி தொகுதியில்ஃபார்வர்டுபிளாக் வேட்பாளராக போட்டியிட்டார்.
1980ல் ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.
     மே.வங்க புருலியாவில்  நடைபெற்ற அகில இந்திய ஃபார்வர்டுபிளாக் மாநாட்டில் பங்கேற்றுவிட்டு திரும்பும் போது ரயில் மேல்பெர்த்தில் இருந்து கீழே விழுந்ததில் பாதிக்கப்பட்டு உடல்நலம் குன்றி இறந்தார்.
     மிகச் சிறந்த பேச்சாளர்
      போராளி
        காமராஜ் ஆட்சியின் அடக்குமுறை உள்ளானவர். குழந்தைகளுக்கெல்லாம்
சிங்கம், பசும்பொன், என்று பெயர் வைத்திருப்பார். அவரது வாரிசுகள் எல்லாம் உள்ளனர்.
        சித்திரசேனன்  அவரது வாரிசுகளின் ஒருவர்  வீதிநாடகக் கலைஞர்
   தற்போது வெளிவந்து ஓடிக்கொண்டிருக்கும்  திரைப்படம் ஒன்றில் நடித்திருக்கிறார் ,என அறிகிறேன்.
அந்தப்படம் பார்க்கவேண்டும்
தோழர் மொக்கையன் சித்திரசேனனுக்காக. 
     தோழர் மொக்கையன் புகழ் வாழ்க.

பதிவு : வரலாற்று பெட்டகம் ஐயா நவமணி அவர்கள்...