Thursday 18 April 2024

ஓட்டுக்கு பணம் கொடுப்பவன் பாவி - வாங்குபவன் தேச துரோகி

"முளைக்கட்டு வருது சொன்னா வீட்டுல இருந்து ஆளுக்கு ஒரு ரூபா, ரெண்டு ரூபாய் எடுத்துட்டு போறான் ஒருத்தன், 

ஜல்லிக்கட்டு வருதுனா ஒரு ரூபா, ரெண்டு ரூபாய் எடுத்துட்டு போறான்,

சினிமா வருதுனா ஒரு ரூபா, ரெண்டு ரூபாய் எடுத்துட்டு போறான்,

ஒயில், கரகாட்டம், டான்ஸ் நடைபெறுதுனு சொன்னா ஒரு ரூபா, ரெண்டு ரூபாய் எடுத்துட்டு போறான் ஒருத்தன் யாரையும் கேக்ரான் இல்லை 

தேர்தல் வருதுனு சொன்னா அந்த ஒரு ரூபா, ரெண்டு ரூபாய எடுத்துட்டு போய் ஓட்டை போட்றபிடாதா!  -உன் 
சொந்த வாழ்வு இல்லையா அது, 

இந்த வேடிக்கை பார்க்கிறதுக்கு ஒரு ரூபா, ரெண்டு ரூபாய் எடுத்துட்டு போறியே , 

தேர்தல் வருதுனா என்ன கொடுப்பாங்கப்பா?

இதுக்கு மட்டும் என்ன கொடுப்பாங்கனு சொல்றியே  உன் வாயில மண்ண போடுற மாதிரி தான கொடுப்பான்." -#பசும்பொன்_தேவர்

பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர் மேடை பேச்சு பதிவு செய்யப்பட்ட ஆடிவோவிலிருந்து தேவர் பேசிய ஆடியோவை கேட்டு அப்பிடியே மேலே எழுதி உள்ளேன். 

Sadaiyandi Puregold Sms

Thursday 4 April 2024

REGUNARHA GAUVERY BRIDGE - ரெகுநாத காவிரி பாலம்

REGUNARHA GAUVERY BRIDGE - ரெகுநாத காவிரி பாலம். 
உலகில் சிறந்த நீர் மேலாண்மை கொண்ட மாவட்டம் இராமநாதபுரம் தான். வைகை ஆற்றை அடைத்து ரெகுநாத சமுத்திரத்தை உண்டாக்கினார்கள். 
குண்டாற்றை திசை மாற்றி ரெகுநாத காவிரியை உண்டாக்கினார்கள். 
முல்லை பெரியாறு திட்டத்தை வழிவகுத்தவர்கள் சேதுபதி மன்னர்கள்.  
சேதுபதி மன்னர் ஆட்சி காத்தில் நெற்களஞ்சியமாக விளங்கிய பூமி இது. உலகின் மிகப்பெரிய நெற்களஞ்சிய தொட்டி இராமநாதபுரம் அரண்மனையில் தான் உள்ளது. 
 சேதுபதி மன்னர் ஆட்சி காலத்தில் செழிப்பாக இருந்த இராமநாதபுரம் - சுதந்திர இந்தியாவில் ஜனநாயக ஆட்சியில் தண்ணியில்லா காடு என அழைக்கப்படும் நிலை. 
படம்: மன்னர் ரெகுநாத சேதுபதி ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட ரெகுநாத காவிரி கால்வாயின் குறுக்கே 1941ல் ஆங்கிலேய ஆட்சியில் கட்டப்பட்ட பாலம் தான் இது.