Tuesday 2 May 2017

வாழும் காலத்தே உலகத் தமிழர்களால் போற்றப் பட்ட உன்னத தலைவர் தேவர் பெருமகனார்

"ஈழத் தந்தை செல்வா " அவர்களின் 60வது பிறந்த நாள் மலருக்கு பசும்பொன் தேவர் பெருமகனாரிடம் கட்டுரை கேட்டு அனுப்பப்பட்ட கடிதம். வாழும் காலத்தே உலகத் தமிழர்களால் போற்றப் பட்ட உன்னத தலைவர் தேவர் பெருமகனார் என்பதற்கு இந்தக் கடிதம் சான்று பகரும்.

கடிதம் அனுப்பப் பட்ட நாள். 2 - 4 - 1957

கடித நகல் இணைக்கப் பட்டுள்ளது.  அந்தச் செய்திகளை பதிவிடுகிறேன்.

"தமிழன் பதிப்பகம்"  ஊர்காவற்றுறை
இலங்கை

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள்
எம்.பி.
பசும்பொன்

வணக்கம்.

இலங்கை தமிழரசுக்  கட்சியின் தந்தை உயர்திரு எஸ்.ஜே.வி. செல்வநாயகம் அவர்களின் 60ஆம் ஆண்டு நிறைவினை முன்னிட்டு ஓர் நூல் வெளியிட விரும்புகின்றோம் .

ஈழத்திலும் தமிழ்நாட்டிலும் உள்ள பலரதும் கட்டுரைகளைத் தொகுத்து வெளிவர இருக்கும் அந் நூலில் தங்கள் கட்டுரையும் இடம் வேண்டுமென விரும்புகின்றோம்.

அன்னாரைப் பற்றியோ அவர் சார்ந்துள்ள கொள்கைகளைப் பற்றியோ - தமிழர் போராட்டம் பற்றி யோ தங்கள் கட்டுரை அமைவது பயனுடைத்ததாகும்.

வணக்கம்!

வை.தியாகராசன்

நன்றி: நக்கீரன்
பேரா .க.செல்வராஜ்

No comments:

Post a Comment