இறுதி நிகழ்வில் பேரறிஞர் அண்ணா பேசியதில் ஒரு பகுதி, " திரு. தேவரவர்களை, பல வருடங்களுக்கு முன் நான் ஒரு தடவைப் பார்த்திருக்கிறேன். பெருந்தலைவரான டாக்டர் வரதராஜுலு நாயுடுவுடன் பெரியாரைப் பார்க்க வந்த தேவரவர்கள், அன்றைய அறம் வளர்த்த பாண்டிய மன்னர்களின் ஒருமித்த இளவல் மாதிரி கம்பீரமாகக் காட்சியளித்தார். பிறகு அந்த பெருந்தலைவரைச் சவமாகப் பார்க்கும் போது உள்ளம் குமுறுகிறது. வார்த்தைகள் வெளிவர மறுக்கின்றன. தன்னிகரற்ற தலைவர் என்பதற்கு அவருக்காக இங்கு கண்ணீர் வடித்துக் கதறும் பல லட்சம் மக்களே சான்று. அவரது தூய பாதையைத் தொடருவோம்". என்று பேசினார்.
No comments:
Post a Comment