Friday 12 May 2017

பசும்பொன் தேவர் மகிமை

மணிநாகப்பா சென்னையை சேர்ந்த சிற்பி. பசும்பொன் தேவர் மீது பக்தி கொண்ட குடும்பம். அவரின் மகளுக்கு பிறந்த ஆண் குழந்தைக்கு  முத்துராமலிங்கம் என பெயர் வைத்தார். ஆனால் சிற்பியின் மகனுக்கு நீண்ட காலமாக குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை. மணிநாகப்பா சிற்பி தனது மகனை அழைத்து பசும்பொன் தேவர் குருபூசைக்கு சென்று தேவர் திருமகனை வணங்கி வா வேண்டுதல் நிறைவேறும் என்றார். மகனும் குருபூசைக்கு சென்று தேவரை வணங்கி வந்த பின் நினைத்த வேண்டுதல் நிறைவேறும் நிலைவந்தது.அவரது மகன் மீண்டும் அடுத்த குருபூசைக்கும் தேவரை வணங்க பசும்பொன் சென்றார். பசும்பொன்னில் இருக்கும்போதே அவருக்கு மகன் பிறந்த தகவல் போன் மூலம் வந்தது.  அந்த குழந்தைக்கு ருத்ரராமலிங்கம் எனப்பெயர் வைத்தார் அவர். தேவர் மீது மிகவும் பக்தி கொண்ட அந்த சிற்பி குடும்பத்தினர் வன்னியர் சமூதாயத்தை சார்ந்தவர்கள். இக்குடும்பத்து சிற்பிகள் செய்த சிலைகளில் கோரிப்பாளையம் தேவர் சிலை, கீழத்தூவல் தேவர் சிலை, கொல்கத்தா தேவர் சிலை, அந்தமான் தேவர் சிலை போன்றவைகளும் அடங்கும். தேவரின் சிலை முதல் முதலில் செய்தவர்களும் இவர்கள் தான்.

No comments:

Post a Comment