Monday 15 May 2017

தேவரைப்பற்றி சில முக்கிய நபர்கள் சொன்னவை


1. மனிதனும் தெய்வம் ஆகலாம் என்பதற்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர் தேவர்.
சொன்னவர் : (கிருபா. வாரியார்)

2. வயதில் சிறியவர், அறிவிலும், ஆற்றலிலும், அனுபவத்திலும் உலகிலேயே சிறந்தவர் தேவர். சொன்னவர் : (இராஜாஜி)

3. நாட்டு விடுதலைக்காகவும், மக்கள் நலனுக்காகவும், சமய எழுச்சிக்காகவும், அரும்பாடுபட்டவர் தேவர்.
சொன்னவர் : (ஈ.வெ.ரா.பெரியார்)

4. தேவர் ஒரு அதிசய புருஷன், கர்மவீரர், மகாயோகி.
சொன்னவர்: (என்.ஜி.ரெங்கா)

5. அறம் வளர்த்த பாண்டிய மன்னர்களில் ஒருமித்த இளவல் தேவர்.
சொன்னவர்:(அறிஞர் அண்ணா)

6.அதீத துணிச்சல் கொண்ட, நெறிமாறா மாமாதை, வணங்கத் தூண்டும் தேசியத்தலைவர் தேவர்.
சொன்னவர்:(காமராஜர்)

7. மிகச்சிறந்த சிந்தனைத்திறன் கொண்ட தீர்க்கத்தரசி தேவர்.
சொன்னவர் : (ஜீவானந்தம்)

8. ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன்பும் சரி, பின்பும் சரி தேவரைப்போல் ஒரு சுத்த வீரத்தலைவர் பிறந்ததும் இல்லை, பிறக்கப்போவதும் இல்லை.
சொன்னவர்:(எம்.ஜி.ஆர்)

9. எனக்கு தெரிந்தவரை தமிழகத்தில் இருந்த பிரம்மச்சாரிகளில் மிகவும் முக்கியமானவர் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்கள், பெண் வாடையே இல்லாமல் வாழ்ந்தவர் அவர்.
உடம்பின் சுக்கிலத்தை உடம்புக்குள்ளேயே வைத்திருந்து மீண்டும் இரத்தத்திலேயே கலந்துவிடுமாறு செய்யும் யோகத்தை அவர் மேற்கொண்டிருந்தார். அவரது உடம்பின் பளபளப்பிற்கு காரணம் அது தான் என்று சொல்வார்கள். ஆனால் அப்படிப்பட்ட நைஷ்டிக பிரம்மச்சாரிகள் நீண்ட நாட்கள் வாழ்வதில்லை.
சொன்னவர் : ( கவிஞர் கண்ணதாசன்)

10. தமிழ் சமுதாய வீர உணர்வின் மொத்த உருவமாக உள்ளும்புறமும்  திகழ்ந்தவர் தேவர் சொன்னவர்: (கலைஞர் கருணாநிதி)

11. சக்கரவர்த்தியைப்போல் வாழவேண்டியவர் தேவர், இறுதிவரை சந்நியாசியாக வாழ்ந்தவர் தேவர்.
சொன்னவர்: (ஜெயலலிதா)

12. வாழ்க்கையை தவமாக்கி அதனை தவம்போல் வாழ்ந்து காட்டியவர் தேவர். சொன்னவர்: (வைகோ)

13. நான் கண்ட மகாத்மா பசும்பொன் தேவர். சொன்னவர்:(நீதியரசர் கிருஷ்ணசாமி ரெட்டியார்)

14. தேவர் சமூகத்தினர் இந்தியாவின் வேறு எந்தச் சமூகத்துக்கும் வீரத்தில் சளைத்தவர்கள் அல்லர் என்பதை மெய்ப்பித்தவர் பசும்பொன் தேவர்.
சொன்னவர்:(கவியோகி சுத்தானந்த பாரதியார்)

15. முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் உடல் தோற்றம்,கம்பீரமான வெண்கலக் குரல்,சந்தன நிறம், ஆகியவற்றோடு மேடைகளில் தோன்றி, வாய் திறந்து செந்தமிழில் முழங்கி முடிக்கிறபோது,""கோழையுமௌ வீரனாகித் திரும்புவார்கள்"".
சொன்னவர்:(தா.பாண்டியன்)

16. நடிகர் தியாகராச பாகவதர் முருகப்பெருமான் பற்றி பாடல் எழுதி அதனை தேவர் முன் படித்து விட்டு முருகனைப் பற்றி பாடல் எழுதினேன் அதை நடமாடும் முருகன் முன் படித்தேன் எனது ஜென்மம் சாபல்யம் அடைந்தது என்று கூறியிருக்கிறார்.!.
ஆம் நமது தெய்வத்தை முருகனாகவே உருவகப்படுத்தியிருக்கிறார் அவர்..!

'சீர்முத்து ராமலிங்க தேவர் பெருமைதனை
பாரும் விசும்பும் பணிந்தறியும் - ஆரும்
அவருக்கு இணையில்லை அன்பு வடிவாய்
உவகையுடன் வாழ்ந்தார் உயர்ந்து.
பசும்பொன் தேவர் குறித்து (கிருபானந்த வாரியார்)கூறியது..!!

வாழ்ந்தால் உங்களைப்போல் வாழ வேண்டும் இல்லையெனில் உன் நிழலடி இளைப்பாற வேண்டும்..!

முருகப்பெருமானை பார்த்ததில்லை யாரும் நேரில்,  ஆனால் நாங்கள் உங்களை பார்க்கிறோம்..!!
நேரில் வந்த தெய்வம் எங்கள் ஐயா தேசியத்தலைவர் பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர் திருமகனார்....

No comments:

Post a Comment