Thursday 11 May 2017

தீர்க்கதரிசி தேவர்

ஆசிய கண்டத்தில் இன்று நடந்துக் கொண்டிருக்கும்
அனைத்து அரசியல்,பொருளாதார சமூக பிரச்சனைகளையும்,
50 வருடங்களுக்கு முன்பே எடுத்துக்கூறிய மகா தீர்க்கதரிசி. தமிழர்களின் ஒற்றுமையையும் சமத்துவத்தையும்,
சங்கத் தமிழர்களின் சமதர்ம சமூக அமைப்பினை நடை முறைப் படுதியவர். ஒதுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட தமிழர்களுக்கு அரசியல் அடையாளத்தை தந்தவர்,
பசும்பொன் தேவரின் அரசியல் சுதந்திர தமிழர் அரசியலின் அடையாளம். அரசியலிலும், தனிப்பட்ட தனது வாழ்க்கையிலும் பரிபூரண ஒழுக்கத்தையும் . தீரத்தையும் வாழ்ந்துக் காட்டிய மாமனிதரின் குரு பூஜையினை தமிழகமே கொண்டாட வேண்டும்.
ஒவ்வொரு நூற்றாண்டுகளில் இந்த மண்ணில் யுக புருஷர்கள் தோன்றுவார்கள். 19 ஆம் நூற்றாண்டில் சுவாமி விவேகானந்தர், இந்து மதத்தை காலத்திற்கு ஏற்ப , Brahminization என்கிற மூட சடங்குகள் இருந்து மாற்றி, கல்வி, சுகாதாரம் என்று, கிறிஸ்துவ Missionaries போன்று, இராமாகிருஷ்ணா மடங்களை உருவாக்கினார். 10 ஆம் நூற்றாண்டில் இருந்த மெல்ல, மெல்ல அழிக்கப்பட்டு வந்த, தமிழர் சமதர்ம அரசியலுக்கு, மறுபடியும்,ஒரு அடையாளத்தை ஏற்படுதியாவர் பசும்பொன் தேவர். நேருவின் பார்ப்பன அரசியல் அவரை சாதி தலைவராக முயற்சித்த போது, திராவிடக் கழகங்கள் அவரை சாதித் தலைவராக முத்திரைக் குத்தி, தமிழர் அரசியலை வளர விடாமல், தமிழினத்தை அழித்துக் கொண்டு வருகிறது. இன்று ஈழ தமிழர் அழிவும், காலங்கடந்து மக்களிடையே ஏற்பட்டு வரும் திராவிட எதிர்ப்பும், மாணவர் போராட்டமும்,அரசியல் ரீதியாக திராவிட அரசியலை யோசிக்க வைக்கிறது.
தமிழகத்தில் பிரிட்டிஷ் கொடுங்கோல் ஆட்சியில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக வந்த பல தடைகளை அரசியல் ரீதியாக தகர்த்தெறிந்தவர் தேவர் அய்யா அவர்கள், ஆனால் கோயபால்ஸ் பிரசாரத்தில், தமிழர்கள் வாழ்வையே திராவிடக் கூட்டங்களுக்கு தாரை வார்த்து விட்டு இன்று,செயல் படக் கூட இல்லை யோசிக்க ஆரம்பிக்கம்போதே பயப்படுகிறது திராவிட அரசியல்.தமிழ், தமிழ் என்று தமிழரின் மொழிப்பற்றை ஊதி பெரிதாக்கி, தமிழர் வாழ்வை மட்டுமல்ல தமிழர் கலாசாரம், தமிழ் நில, நீர் வளங்கள், தமிழகத்தின் வாழ்வாதாரங்கள்இவற்றையெல்லாம் அழித்துக் கொண்டு வருகிறது. ,எல்லாவற்றிக்கும் மேலாக தமிழர்களின் உழைக்கும் மனவலிமையை ,இலவசங்களை கொடுத்து, அழித்து வருகிறது இந்த திராவிட அரசியல். 5000 ரூபாய் வீட்டுச் சாமன்களைக் கொடுத்து ,500000 லட்சத்திற்கு அவனது உயர் கல்வியை வைத்து, அவனை முன்னேறவிடாமல் செய்கிறது. மருத்துவம் எட்டாக் கனிதான். வளர்ந்த நாடுகளில், கல்வியும் சுகாதாரமும்தான் இலவசமாக சாதாரண மக்களுக்கு எளிதில் கிடைக்க வழி செய்யும்.ஆனால் இந்தியா பொருளாதாரம் தலைகீழானது.
பசும்பொன் தேவர் அய்யாவைப் பற்றி தமிழர்கள் எத்தனைப் பேருக்கு தெரியும்? அவரது சொற்பொழிவுகள் எவ்வளவு கிடைத்துள்ளன? இன்றளவும் அவரது கொள்கைகள் பற்றி என்ன தெரியும்? வெள்ளக்காரனுக்கு மட்டுமல்லாது அவனது தயவை நாளும் போற்றிய நமது பின்னால் காங்கிரஸ் தேசியவாதிகளுக்கும் அவர் சிம்ம சொப்பனமாக இருந்தார் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? மிகப்பெரிய ஆளும் காங்கிரஸ்க்கு எதிர்க்கட்சியாக இருந்த .socialist கட்சியான ,நேதாஜியின் Forward Bloc-கின் தேசிய தலைவர் பசும்பொன் தேவர். அவர் தனக்காக பிரசாரம் செய்யாமலே தொடர்ந்து மக்களின் பேராதரவுடன் ஒரு லட்சம் வாக்கு வித்யாசதில் மிகப்பெரிய வெற்றியினை பாராளுமன்ற தேர்தலிலும், சட்டமன்ற தேர்தலிலும் பெற்ற ஒரே இந்தியா தலைவர் ஏன் உலகளவில் ஜனநாயக தேர்தல் வெற்றிகளில், கின்னஸ் ரெகார்டில் இருப்பவர் தேவர் அய்யா என்பது எத்தனை இளையவர்களுக்கு தெரியும்? பெற்றத் தாயும் சொந்த சாதிக்காரனும் ஆதரிக்காத, காமராஜருக்கு ஆட்டுக்குட்டி வாங்கிக் கொடுத்து, அதற்கு காமராஜர் பெயரில் வரி கட்டி பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெறச் செய்தவரை, பதவிக்காக தனது சாதிக்காரர்களின் கள்ள மார்க்கெட், கருப்பு பண வியாபார வளர்ச்சிக்காக, நேருவின் சதிக்கு உடன்பட்ட காமராஜரின் நன்றிகெட்ட, நம்பிக்கை துரோகம் எத்தனை பேருக்குத் தெரியும்? முதுகுளத்தூர் கலவரத்தை உருவாக்கி, தேவர் அய்யா அவர்கள் மீது அன்றைய காமராஜர் காங்கிரஸ் கொலைக் குற்றம் சாட்ட ,
அவர் குற்றமற்றவர் என்று தீர்ப்பாகி , விடுதலையான பிறகும்
அதேப் போன்று மிகப் பெரிய வாக்கு வித்யாசதில்
பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றார் என்பது
எத்தனை இளைஞர்களுக்கு தெரியும்?
பத்திரிக்கைகள், ஆட்சிகள்,கட்சிகள், ஊடகங்கள் போற்றிப் புகழ் பாடும் the so called தமிழக அரசியல் தலைவர்களுக்கு ஏன் இந்திய அளவில் வேறு எந்த தலைவர்களுக்கும் வராத மக்கள் கூட்டம் தேவர் ஜெயந்திக்கு வருகிறதே என்ற பொறாமையில் குருபூஜையை தடை செய்ய வேண்டும் என்று சமீபகாலமாக பிரசாரம் செய்யப் படுவது ஏன்? யோசியுங்கள்.
சுயநல சூத்திர சாதி அரசியலை தங்களது நாயக்க பாதுகாப்புக்கு பயன்படுத்திக்கொண்ட, இந்த திராவிட அரசியல் இன்றுவரை பசும்பொன் தேவரைப் பற்றி ஏன் இருட்டடிப்பு செய்கிறது?
டி‌வி‌எஸ், மீனாக்ஷி மில்ஸ் என்று, பிரிட்டிஷ்காரன் தயவில் தொழில் நடத்திய நமது அக்கிறஹாரம் பெரியவா, 20 மணிநேரம் வேலை வாங்கி தொழிலாளர்கள் வாடி வதக்கிய அக்கிரமத்தை தேவர் எதிர்த்து தொழிற்சங்கம் ஆரம்பித்து போராடினார் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?
பெரியவாளுக்கு ஆதரவாக மிகப்பெரிய பெரியவா ஆச்சாரியார் ராஜாஜி அவர்கள் இருந்தார் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? இன்றைக்கு தலித் அரசியலை மறைமுகமாக வளர்த்துவரும் பார்ப்பன இயக்கங்கள்,ஊடகங்கள் தேவரின் குருபூஜயை தடை செய்ய வேண்டும் என்று பரிதவிப்பது ஏன்?
பத்திரிக்கைகள் மூலம் தமிழர் நலம் பேசும் இவர்கள் குருபூஜையை தடை செய்வதால் சாதிக் கலவரங்கள் இருக்காது என்று கூற முடியுமா?
என்னவோ தமிழகத்தில் மட்டும்தான் சாதிகள் இருப்பது போலவும், இந்தியாவில் இல்லாது போலவும் அலட்டுகிறார்கள்?
இந்தியாவில் மட்டுமல்ல உலகெங்கும்,சாதி இன அரசியல்தான். பார்ப்பனர்கள் யுகாயுகமாக நடத்துவது என்ன அரசியல்?
பசும்பொன் தேவர் கூறிய அறிவுரைகளையும் பொன்மொழிகளையும் பெரியார் சொன்னார்,அண்ணா சொன்னார் இவர் சொன்னார் அவர் சொன்னார் என்று இன்றைய தேதி வரை ஏற்றி சொல்லும்
இந்த ஊடக பொய்யர்கள் ஏன் இப்படிச் செய்கிறார்கள் என்று
எத்தனை பேர் யோசித்திருப்போம்?
தமிழகத்தில் ஊடகங்கள் யாரிடம் இருக்கிறது?
பசும்பொன் தேவரைப் பற்றி எந்தவிதத்திலும் தமிழர்களுக்கு, உலகிற்கு தெரியக் கூடாது என்று தமிழ் பேசும் பிற சாதிகள், அரசியல்வாதிகள், ஊடகங்கள் ஏன் முழுவதுமாக மறைக்கின்றன?
என்பதையாவது யோசித்திருப்போமா?
இத்தனை கஷ்டப்பட்டு மறைத்தும் மக்கள் ஏன் இத்தனை வருடங்களாக தொடர்ந்து அவரது குருபூஜையை மாபெரும் திருவிழாவாக வணங்கி வருகிறார்கள். அவரது கட்சி காணமற் போய்விட்டது, அவரை சாதி வெறியராக, சாதித் தலைவராக சிறுமைப் படுத்தியும், எந்த அரசியல் அரசாங்க ஊடக ஆதரவு, இல்லாமல் மக்கள் ஏன் தேவரை கொண்டாடுகிறார்கள்?
அவரது குருபூஜை குலைப்பதற்கு என்னென்னவோ செய்து பார்த்தும் பாமரத் தமிழன் நன்றி மறவாமல் இன்றும் வருவது ஏன் யோசியுங்கள் எனது தமிழ் இளைஞர்களே.
எந்தவித சாதி வேறுபடும் இன்றி பசும்பொன்னிற்கு வந்து அவரை கும்பிட்டு, மொட்டையடித்து தெய்வமாக கும்பிடுகிறானே ஏன் ?என்று யோசியுங்கள்.
இன்று தமிழுணர்வுடன் மேலோங்கி நிற்கும் தமிழர்களுக்கு
அரசியல் மாற்றம் வேண்டும் என்று என்னும்
ஒவ்வொரு தமிழ் இளைஞர்களும் தெளிவாக
தேவரை பற்றி மட்டுமல்ல 1800 க்குப் பிறகு பாளயக்காரர்களை அழித்த பிறகு பிரிட்டிஷ் செய்த சதிகளையும், அன்றைய அரசியல் நிலைகளையும் , குற்ற பரம்பரை சட்டம் ஏன் வந்தது? என்கிற அரசியல், பொருளாதார ,சமூக மாற்றங்களை கண்டிப்பாக
தெரிந்துக் கொள்ளுங்கள்.
தென் தமிழ் நாடும் சாதாரண ஏழை விவசாயிகளும் ,தாழ்த்தப்பட்ட மக்களும், குற்ற பரம்பரம்பரை சட்டம் என்கிற பெயரில் பிரிட்டிஷ் காலனிகளுக்கு கேள்வி வரை முறையற்று ஏற்றுமதி செய்த போது அதைப் பற்றி எந்தவித கவலையுமில்லாமல், தங்களது விசுவாசத்தை விற்ற கூட்டம், மக்கள் எழுச்சிக்கு பிறகு பிரிட்டிஷ் ஆட்சி மாறியவுடன்,தங்களது விசுவாசத்தை காங்கிரசுக்கு விற்ற கூட்டம் இன்று தமிழ் சாதிகளைப் பற்றி பாவம் கவலைப்படுகிறது! பிரிட்டிஷ்காரன் காலைப் பிடித்து தங்களை 1920 சத்திரியர்கள் என்று gazatte- ல் பதிவு செய்த சாதிகளைப் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள். Minto – Morley அறிக்கையின்படி இந்தியர்கள் ஆட்சியில் பங்கேற்க, பிரிட்டிஷ் பாராளுமன்ற முறையில் வந்த தேர்தலுக்கு, பார்பனர்களும், ஜஸ்டிஸ் கட்சி என்ற ராஜாக்களும் எப்படியெல்லாம் அலைந்தார்கள் என்று தெரிந்துக் கொள்ளுங்கள்.
1900களில் இருந்து 1947வரை உயர் கல்வி என்பது, பார்பனர்களுக்கும், வட தமிழக வெள்ளாளர்களுக்கும் மதம் மாறிய சாணர்களுக்கும், ரெட்டிகளுக்கும் கம்மாவார் நெல்லூர் நாயுடுகளுக்குமே மட்டுமே வழங்கப்பட்டது என்ற உண்மையை தெரிந்துக் கொள்ளுங்கள்..
1970களுக்குப் பிறகுதான் தென் மாவட்டங்களில் உயர் கல்வி வந்தது. அதுவும் அறிஞர் அண்ணா இறந்தபிறகு நின்றுவிட்டது.
காங்கிரஸ் தங்களை ஒடுக்கப்பட்ட மக்களின் போராளிகள் என்ற பொய் பிரசாரத்தை அன்றே கூறி வந்ததை தெரிந்துக் கொள்ளுங்கள். மக்களுக்காக பாடு பாடுவேன் என்று சொன்ன காங்கிரஸ் பிரிட்டிஷ்க்கும், முதலாளிகளுக்கும் எப்படியெல்லாம் சலாம் போட்டது, காங்கிரஸ் வளர பாடுபட்ட தேவர் அவர்கள் காங்கிரஸின் காலைவாரிவிடும், மக்கள் விரோத போக்கை முறியடிக்க நேதாஜியின் ஃபார்வார்டு பிளாக் –கை மிகச் சிறந்த எதிர்க் கட்சியாக உருவாக்கினார் என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்.
சங்க கால தமிழக சாதிய அமைப்பு, நாயக்கர்கள் காலத்தில் இருந்து ஆரம்பித்த மாற்றங்கள் பிரிட்டிஷ் காலத்தில் ஏற்பட்ட சதிகள் இவற்றை எல்லாம் தெளிவாக புரிந்துகொண்டு செயல் பட்டால்
தமிழர் அரசியல் மலரும்.சுதந்திர ஈழமும் அமையும்.
வாழ்ந்த காலம் வரை தமிழர் வாழ்வு, சிறு விவாசயிகளின் பாதுகாப்பு, கள்ள மார்க்கெட், கருப்பு பணம் இவற்றை எதிர்த்த பசும்பொன் தேவரை, கம்யூனிஸ்ட் தோழர்கள் மறந்தது ஏன்?
நேதாஜி ஃபார்வார்டு பிளாக் ஆரம்பித்து INA ஆரம்பிக்கப் போய்விட்டார்,
தேவர் தான் ஃபார்வார்டு பிளாக்கை மிகச் சிறந்த எதிர் கட்சியாக உருவாக்கி, பிரிடிஷ்க்கும் நேருவிற்கும் தமிழக திராவிடக் கட்சிக்கும்
சிம்ம சொப்பனமாக இருந்தார் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
தேவரை முற்றிலுமாக தமிழக அரசியலில் இருந்து மறைக்க, இருட்டடிப்பு செய்வதன் காரணம் ஏன் என்று யோசியுங்கள்.?
இந்த தேசத்தின் சாதாரண மக்களின் வாழ்வுக்காக அவர்கள் எந்தவிதத்திலும் சுரண்டப் படக்கூடாது, அவர்களுக்கு நியாயமாக கிடைக்கவேண்டிய பொருளாதார சுதந்திரம் மறுக்கப்படக் கூடாது, எல்லாவற்றிற்கும் மேலாக ஊழலும்,அதை வளர்க்க சுயநல சாதிய மத அரசியலையும் முழுமையாக எதிர்த்த, ஒப்பற்ற ஒழுக்க நெறிகளின் உன்னதமான தலைவர், அரசியல் முதல் ஆன்மிகம் வரை, தெளிவாக, எளிமையாக மக்களுக்கு புரியவைத்து, விளக்கிச் சொல்லிச் சென்ற அவரது சொற்பொழிவுகள் எங்கே?.
அவரை இருட்டடிப்பு செய்வது மட்டுமல்லாது அவரை அவமானப்படுத்துவதும், இந்த திராவிடர் சாதி அரசியலுக்கு
முழுநேர வேலையாக போய்விட்டது.
தமிழர் உணர்வு பொங்கும்போதெல்லாம் அவரது சிலையை சேதப்படுத்தி, சாதிக் கலவரதிற்கு வழிவகுப்பது ஏன்? என்று
சற்று யோசிப்போம்.
இவர்களது இந்த தமிழர் விரோத அரசியலுக்கு பெரிதும் உறுதுணையாக இருப்பது 1990களில் இருந்து வளர்ந்து வரும்
தலித் அரசியல். வர்க்க ரீதியாக போராட வேண்டிய கம்யூனிஸ்ட்கள், தலித் அரசியலை மையமாக கொண்டார்கள்.
தனியாக தலித் அரசியல் வளர்ந்த பிறகு கம்யூனிஸ்ட்கள் காணாமற்போனார்கள். தேவர் சொன்னது socialism – சமதர்ம அரசியல். பாடுபடுபவன் எந்த சாதி என்று அவர் பார்ர்க்கவில்லை, ஒதுக்கப் பாடுபவன் எந்த சாதி என்று அவர் பார்க்கவில்லை, ஒடுக்கப்படுபவன் உரிமையை இழந்தவனை ,எந்த சாதி என்று பார்க்கவில்லை, மக்கள் உழைப்பை, அவர்களது வாழ்வாதாரத்தை, பொருளாதார் ரீதியாக கள்ள மார்க்கெட் ,கலப்படம், கருப்பு பணம் என்று அரசியல் செய்பவர்களை எதிர்த்தார். அதைத்தானே இன்று நாம் அனைவரும் எதிர்க்கிறோம். “குறைந்தபட்சம் உங்களின் குழந்தைகைளின் நலனுக்காக ஊழலைக் குறையுங்கள்”.என்றார். இன்று நம் குழந்தைகள் பாதுக்காப்பக இருக்கிறார்கள் என்று நம்மால் உறுதியுடன் கூற முடியுமா?
எனது முப்பாட்டனும்,பாட்டனும், தெளிவாக ,அனைத்து அடக்குமுறைகளையும் மீறி சுதந்திர தமிழர் அரசியல் செய்தார்கள். உரிமைக்காக போராடினார்கள். நன்றிக் கெட்ட, நம்பிக்கைத் துரோகத்தை இன்றுவரை ஒதுக்கிவைத்து உள்ளார்கள்.
அதுதான் இன்றைய தமிகக்க காங்கிரஸ் நிலை.ஆனால் சுதந்திரம் அடைந்தவுடன் எனது படித்த அப்பன்கள்தான் சாதி அரசியலையும், அடிமை அரசியலையும் திராவிட அரசியல் என்று கூறி அனைத்து வகையான அயோக்கிய சுயநல, தன் குழந்தைகளையே அழிக்கும் அரசியலை வளர்த்து உள்ளார்கள். இன்று எம் இனத்திற்கு நல்ல தலைமையை கூட இவர்களால் தர இயலவில்லை.
தமிழர் உணர்ச்சிகளை போஸ்டர் ஒட்டி அரசியலாக்கும் இவர்களை தமிழர்காலால் என்ன செய்ய முடிந்தது?
தேவரை இருட்டடிப்புச் செய்து இன்றுவரை தமிழகத்தில் அரசியல் செய்யும் இந்த தமிழர் ஆதரவு அரசியல் கட்சிகள் ஏன்எடுபடவில்லை? அவர்களை ஏன் மத்தியிலும் மாநிலத்திலும் மக்களும் கண்டுக்கொள்ளவில்லை?
பத்திரிக்கைகளின் பக்கம் நிரப்பவும், தங்களுக்கு ஆதரவாக பேசுகிறார்கள் என்கிற மரியாதை தவிர எந்த விதத்திலும்
இவர்களால் அரசியல் மாற்றத்தை ஒரு இன்ச் கூட கொண்டு வர ஏன் முடியவில்லை?.
பசும்பொன் தேவரை தனிமைப் படுதியவர்கள் இன்று மக்களிடம் இருந்து தனிமைப் பட்டுக்கொண்டார்கள். ஈழத் தந்தை செல்வா தோட்டத் தொழிலாளர்களுக்கு ஓட்டுரிமை மறுக்கப்பட்ட போது அமைதி காத்த ஈழ தமிழர் அரசியலைப் பார்த்து கூறியது நினைவு வருகிறது, “இன்று உமக்கு ,நாளை நமக்கு”.
உலகெங்கிலும் தங்களது உழைப்பால் அந்தந்த நாட்டு வளத்தை பெருக்கிய தமிழன் இன்றும் அடிமைத் தமிழனாக அரசியல் பொருளாதார நிலையில் மிகக் குறைந்த அளவே முன்னேறியுள்ளான். அவனுக்கு எங்கும் அங்கீகாரம் மறுக்கப்படுகிறது. தனிப்பட்ட சுயநலவாதிகளுக்கே அதிகாரம் தரப்பட்டு அவர்கள் மூலமே தமிழினம் அழிக்கப் படுகிறது என்பதை மிகத் தெளிவாக புரிந்துக் கொள்ளுங்கள் ,
பசும்பொன் தேவர் அவர்களைப் பற்றி முழுவதுமாக தெரிந்துக் கொள்ளுங்கள். அப்பொழுதுதான் காங்கிரஸ்,திராவிட நயவஞ்சக அரசியல் எப்படி ஒரு மாபெரும் தமிழர் வாழ்வாதாரத்தை, பொருளாதாரத்தை அரசியலை, கலாச்சாரத்தை முற்றிலுமாக அழித்தது என்று தெரிய வரும்,புரிய வரும். மகான்களின் வாழ்க்கை என்றும் மக்களுக்கு பாடமாக இருக்கும். இன்று அனைத்து விதத்திலும் நம்மை அழித்துக் கொண்டு இருக்கும் இந்த அயோக்கிய அடிமை இனத் துரோக அரசியலை அப்புறப் படுத்த நாம் பசும்பொன் தேவர் அவர்களது குருபூஜையை தமிழகமே கொண்டாட வேண்டும். அது சாதிக் கூட்டம் அல்ல தமிழர் கூட்டம் என்று புரிய வைப்போம்..
இன்று தமிழினம் அனைத்து வகையிலும் அழிக்கப்பட்டு வருகிறது. சிங்களவன் செய்வது இராணுவ அழிப்பு. இந்தியா செய்வது வாழ்வாதார அழிப்பு, மலையாள,கன்னட, தெலுங்கர்கள் செய்வது பொருளாதார அழிப்பு. இந்த திராவிடக் கட்சிகள் செய்வது சமூக ,கலாச்சார அழிப்பு. ( இதனைப் பற்றி விரிவாக பின்னர் எழுதுகிறேன்) இந்த அழிவுகளிருந்து எமது இனத்தின் எதிர்காலம் காப்பாற்ற பட வேண்டுமானால் எமது இளைஞர்கள் 10ஆம் நூற்றாண்டிலிருந்து நமது தமிழக அரசியலை அறிய வேண்டும்.. தமிழக எல்லைகள் குறுக்கியதன் காரணம் புரிய வேண்டும்.
எனது சாதாரண தமிழர்கள் அனைவருக்கும்,
தாழ்த்தப்பட்ட சகோதரர்களுக்கும் சேர்த்தே சொல்லுகிறேன்
இன்றைய பார்ப்பன ஊடகங்கள்
தேவர் குருபூஜையை தடைச் செய்ய வேண்டும் என்று
பிரசாரம் செய்வது உங்கள் நன்மைக்கோ, உரிமைக்கோ அல்ல, இருக்கும் ஒரே தமிழர்களின் அரசியல் அடையாளத்தை அழிப்பதற்கே, ஈழம் அழிந்தது, தமிழர்களின் அனைத்து அடையாளங்களும் அழிந்தன. தமிழக பரதவர் குலம் மெல்ல மெல்ல அழிக்கப்பட்டு வருகிறது,
150 வருடங்களாக தமிழால் இணையாத THE Hindu இன்று தமிழால் இணைகிறார்கள்.
நல்ல வேடிக்கை. நாம் தமிழால் இணைந்தது போதும்,
இனியாவது தமிழர்களாக இணைவோம்.
தலித் அரசியல் தனிப்பட்ட அரசியாலாகி விட்டது. அவர்கள் தங்களது இனத்தை விட்டு மெல்ல மெல்ல விலகி வருகிறார்கள்.
இந்த நிலை இன்று இந்தியா முழுவதும் உள்ளது.
இமானுவேல் சேகரன் பிரச்சனை கால ஓட்டதில் காணாமற் போய்விடும். இன்று தலித் அரசியலுக்கு எதிர் அரசியலும் தன்னால் உருவாகி வருகிறது.. That is Political science. every action will have a same and equal reaction இதன் விளைவுகளைக் காலம் சொல்லும். அதை பற்றி நாம் அதிகமாக அலட்டிக் கொள்ள வேண்டாம்.
அதனை அரசியல் ரீதியாக எதிர் கொள்ள வேண்டும்.
அதற்கு மாற்றி யோசிக்க வேண்டும்.
தேவர் ஜெயந்தியில் கலந்துகொண்டு திரும்பியவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு, தமிழக அரசு, அனைத்து உதவிகளும் செய்து, தற்போது அரசு வேலையையும் தந்துள்ளது. நன்றி. அந்த பாவப்பட்ட மக்களுக்கு இது ஒரு ஆறுதல்.
தேவர் குரு பூஜைக்கு இந்த வருடம் தடை வந்தாலும் சரி வராவிட்டாலும் சரி குரு பூஜை வழக்கம் போல நடக்கும். ஏனெனில் இந்த அரசியல் ஓட்டுப் பொறுக்கிகள் தேவர் குருபூஜையை அரசியல் ஆக்குவதற்கு முன்பே பாமரத் தமிழன் தனது தன்னிகரில்லா தலைவனுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறான்..
மக்களும் தெளிவாகவும் கவனமாகவும் இருக்கவேண்டும். உண்மையான தமிழர் வாழ்வில் ,தமிழர் அரசியலில்,
விடிவு வேண்டும் என நினைக்கும் எனது எதிர்க்கால தமிழினமே,
எந்த சாதியாக இருந்தாலும் ,சரி தமிழின உணர்வுடன்,
ஒப்பற்ற தமிழின தலைவனை வணங்கி,
விலைபோகாத வீரமும் விவேகமும் நிறைந்த மகாஞானி,
மக்கள் தலைவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவரை வணங்க வாருங்கள். . வாருங்கள் எமது இளையதமிழகமே, தம் மக்களுக்காக தன்னையே தந்த அந்த தன்னிகரில்லா தமிழின தலைவருக்கு நமது அன்பை, மரியாதையைச் செலுத்த வாருங்கள்.
நல்லதொரு அரசியல் மாற்றம் உருவாக அவர் வழிக்கட்டுவார்.
பசும்பொன் தேவரின் குரு பூஜை ,தமிழர்களின் ஒற்றுமையை,அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
நமது குழந்தைகளுக்கு பசும்பொன் தேவர் அய்யவைப் பற்றித் தெரிய வேண்டும். வரும் தேவர் குரு பூஜை அன்று ஊர் தோறும் குழந்தைகளுக்கு தேவர் படம் போட்ட சிறு கொடிகளைச் சட்டையில் செருகி ,சாக்லேட் கொடுத்து மகிழ்வோம்.
சுதந்திரம் போன்று சுதந்திர தமிழர் அரசியலை உருவாக்குவோம். இதனை இளைய தமிழினம் சாதிக்க வேண்டும். சாதிக்க முடியும். நல்ல தலைவனை போற்றினால் நன்மை விளையும்.

No comments:

Post a Comment