Thursday 18 January 2018

உன் வாயில் மண்ணு



"முளைக்கட்டு வருது சொன்னா வீட்டுல இருந்து ஆளுக்கு ஒரு ரூபா, ரெண்டு ரூபாய் எடுத்துட்டு போறான் ஒருத்தன்,

ஜல்லிக்கட்டு வருதுனா ஒரு ரூபா, ரெண்டு ரூபாய் எடுத்துட்டு போறான்,

சினிமா வருதுனா ஒரு ரூபா, ரெண்டு ரூபாய் எடுத்துட்டு போறான்,

ஒயில், கரகாட்டம்,டான்ஸ் நடைபெறுதுனு சொன்னா ஒரு ரூபா, ரெண்டு ரூபாய் எடுத்துட்டு போறான் ஒருத்தன் யாரையும் கேக்ரான் இல்லை

தேர்தல் வருதுனு சொன்னா அந்த ஒரு ரூபா,ரெண்டு ரூபாய எடுத்துட்டு போய் ஓட்டை போட்றபிடாதா!  -உன்
சொந்த வாழ்வு இல்லையா அது,

இந்த வேடிக்கை பார்க்கிறதுக்கு ஒரு ரூபா, ரெண்டு ரூபாய் எடுத்துட்டு போறியே ,

தேர்தல் வருதுனா என்ன கொடுப்பாங்கப்பா?

இதுக்கு மட்டும் என்ன கொடுப்பாங்கனு சொல்றியே  உன் வாயில மண்ண போடுற மாதிரி தான கொடுப்பான் .-

பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர்


No comments:

Post a Comment