Friday 7 July 2017

தியாகி இராமுத்தேவர் நினைவு விழா புகைப்படங்கள்

7.7.2017
இராமநாதபுரம் மாவட்டம் தும்படைக்கா கோட்டையில் பிறந்த தியாகி ராமுத்தேவர் அவர்களின்  நினைவுதின விழா நடைபெற்றது . தியாகி ராமுத்தேவர் படித்த திருஇதய உயர்நிலை பள்ளியில் நடைபெற்ற விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர்  அருட்சகோதரி ஜோஸ்பின் ஏஞ்சல் மேரி தலைமை வகித்தார்.
நல்லாசிரியர்
சொ.பகிரத நாச்சியப்பன் , வே.சுவாமிநாதன் மற்றும் பொன்முத்துராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகுத்தனர். தலைமை ஆசிரியர் பேசும் போது தியாகி ராமு அவர்களை போற்றும் விதமாக தியாகி பெயரில் ராமு தேசிய மாணவர் படை பள்ளியில் உருவாக்கப்படும், மேலும் பள்ளி வளாகத்தில் தியாகி ராமுவுக்கு சிலை நிருவப்படும் என கூறினார். பின்னர் பேசிய சுவாமிநாதன் அவர்கள் அதற்கு முழு உதவி பெற்று தருவதாக உறுதியளித்தார்.   முடிவில் பள்ளி படிப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது.விழாவில் ஏராளமாக பள்ளி மாணவ மாணவிகள் கலந்துகொண்டு பயன்பெற்றார்கள் .

No comments:

Post a Comment