Tuesday 4 July 2017

இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தது யார் ?


இந்தியாவிற்கு சுதந்திரம் அடைய
காரணமானவர் மாவீரன் சுபாஷ்
சந்திரபோஸ் தான் .

அவரது
அர்ப்பணிப்பும் தியாகமும் பொன்
எழுத்துக்களால் பொறிக்கப் பட
வேண்டியவை திட்டமிட்டு மறைக்க
பட்டுவிட்டது .

இந்தியாவுக்கு
சுதந்திரம் வாங்கி கொடுத்தது
யாரோ ?

அந்த பேரையும்
புகழையும் அனுபவிப்பது
யாரோ ?

நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் மறைக்கபட்ட வரலாறு சுருக்கமாக :

அகிம்சை முறையில் போராடி
கொண்டு இருந்த காந்தியிடம்
சந்திரபோஸ் சொன்னார் . அகிம்சை
முறையில் போராடினால் பல
ஆண்டுகளாக இந்த போராட்டம்
இழுத்து கொண்டே போகும் .
கோடிகணக்கான இந்தியர்களை
வெறும் இருபதாயிரம்
வெள்ளையனைக் கொண்ட
ராணுவம் அடிமை படுத்திவைத்து
இருக்கிறாது . ஏன் அந்த
ராணுவத்தை அடித்து விரட்ட
கூடாது . அவர்களை நான் ஆயுத
ரீதியாக எதிர்கொள்ள திட்ட மிட்டு
இருக்கிறேன் .

உங்களின் கருத்து
என்ன என்று காந்தியிடம் கேட்ட
போது அகிம்சையை போதிக்கும்
நான் இதை ஒருநாளும் ஏற்று
கொள்ள மாட்டேன் என்று சொன்னார். இருவருக்கும் நிறைய கருத்து
மோதல் வந்த பின்னர் சந்திரபோஸ்
அவர்கள் தனித்து போராட
தயாராகினார். முதல் கட்டமாக
தமிழ்நாடுக்கு வந்தார் . வந்து
துடிப்பான இளைஞ்சர்களை
சந்தித்து . வெள்ளையனை நாம்
ஆயுத ரீதியாகதான் எதிர்கொள்ள
வேண்டும் அதற்காக நாம் ராணுவ
கட்டமைப்பை உருவாக்க வேண்டும் .

என்று இளைஞர்களிடம் பிரச்சாரம்
செய்தார் . பிறகு இதே
பிரச்சாரத்தை இந்தியாவில் மற்ற
மாநிலங்களுக்கும் சென்று
இளைஞர்களின் ஆதரவை
திரட்டினார் . ஆனால் அது
அவருக்கு தோல்வியிலே
முடிந்தது யாரும் ஆயுதம் எடுத்து
போராட முன் வரவில்லை மீண்டும்
தமிழகம் வந்த போது தமிழகத்தில்
உள்ள ஆயிர கணக்கான
இளைஞர்கள் சுபாஷ் சந்திர போஸ்
அவர்களின் போராட்டதிற்கு
ஆதரவளித்தார்கள். அந்த
இளைஞர்களுக் கெல்லாம்
மறைமுகமாக பயிற்சி
அளிக்கப்பட்டது .

தமிழகத்தில்
காந்தியின் ஆதரவாளர்கள்
எண்ணிக்கை நாளுக்குநாள்
குறைந்து கொண்டே போனது .
தமிழர்கள் சுபாஷ் சந்திரபோசின்
போராட்டத்தில் நம்பிக்கை கொண்டு
ராணுவத்தில் இணைய
ஆரம்பித்தார்கள்.அப்போது சுபாஷ்
சந்திரபோஸ் தலைமையில் ஆயுத
புரட்சி ஒன்று ஆரம்பித்து
உள்ளார்கள் என்று
வெள்ளையர்களுக்கு தெரியவர
இவர்களை எல்லாம் வெள்ளையர்கள்
வேட்டையாட ஆரம்பித்துள்ளார்கள். சந்திரபோஸின் இயக்கத்தில் பெரும்
தமிழ் இளைஞர்கள் இணைந்து
கொண்டதை அறிந்த காந்தியின்
ஆதரவாளர்கள் . சுபாஷ்
சந்திரபோசை காட்டி கொடுக்கவும்
ஆரம்பித்தார்கள். அதனால் அவரால்
இந்தியாவில் இருந்துகொண்டு
செயல்பட முடியாமல் போனது.
வெள்ளையர்களிடம்இருந்து
தப்பித்து சுபாஷ்சந்திரபோஸ்
வெளிநாடுக்கு சென்றார் . சில
வெளிநாட்டு தலைவர்களை
சந்தித்து தனது போராட்டத்தின்
ஆதரவை திரட்டினார் .

ஒவ்வொரு
நாடாக சென்று போருக்கான
ஆயுத தளவாடங்களை ஹிட்லர்
மூலம் சேகரித்தார் . எல்லாம்
தாயாரான பின்பு இந்தியாவில்
இருக்கும் வெள்ளையர்களின்
ராணுவ முகாம்களின் எண்ணிக்கை
எங்கே இருக்கிறது எத்தனை பேர்
இருக்கிறார்கள் என்று உளவு
பார்த்து தகவல் அறிந்து கொண்ட
பின்னர் .தமிழ் நாட்டில் இருக்கும்
அவரின் ஆதரவாளர்களுக்கு தகவல்
அனுப்பினார் . நான் வெளிநாட்டில்
மிகப்பெரிய ராணுவ கட்டமைப்பை
உருவாக்கி இருக்கிறேன். இந்த
ராணுவத்தில் இணைந்து நமது
நாட்டு விடுதலைக்காக ஆயுதம்
எடுத்து போராட விரும்புபவர்கள்.
என்னுடன் இணைந்து கொள்ளலாம்
என்று தகவல் அனுப்பி இருந்தார்.
இந்தியா முழுவதும் இந்த தகவல்
பரவியது . இதை அறிந்த தமிழக தேச
பற்றாளர்கள் ஆயிரக்கணக்கான
இளைஞர்கள் படகு மூலம்
வெளிநாட்டுக்கு செல்ல
ஆரம்பிதார்கள். அங்கே
எல்லோருக்கும் போர்ப் பயற்சி
அளிக்கப்பட்டது . அப்போது
போராளிகளிடம்
சுபாஷ் சந்திரபோஸ் பேசினார்.
எமது தேசத்தில் வெறும் இருபது
ஆயிரம் வெள்ளையனின் ராணுவம்
இருக்கிறது . நாம் இங்கு
மிகப்பெரிய ராணுவ கட்டமைப்பை
உருவாக்கி இருக்கிறோம்.

அவர்களை நாம் கப்பல் மூலம்
சென்று டெல்லி வரை தாக்க
போகிறோம் டெல்லியில் தான்
வெள்ளையனின் முழு பலமும்
இருக்கிறது எனவே டெல்லி வரை
நாம் சென்று தாக்க போகிறோம்
என்று சொன்னார். ஆனால் இந்த
ராணுவத்தில் பெரும்பாலானோர்
தமிழர்கள் என்பது குறிப்பிட தக்கது. ஒரு பக்கம் காந்தியின் அகிம்சை
போராட்டம் நடந்து கொண்டிருந்தது.
சுபாஷ்சந்திரபோஸ் திட்டமிட்டபடி
யுத்த ஆயுத கப்பல்கள் மூலம்
சென்று டெல்லி வரை
வெள்ளையர்களின் ராணுவத்தை
அடித்தார்கள் . அப்போது
வெள்ளையர்கள் பாரிய
உயிரிழப்புக்களைசந்தித்தார்கள் .
வெள்ளையர்களுக்கு வெளிநாட்டில் இருந்து வரும்
ஆயுத உதவிகளை தடுத்தார்கள்
முக்கியமான கடல்வழி பாதை
சுபாஷ் சந்திர போஸின்
கட்டுபாட்டுக்குள் வந்தது . அதனால்
தொடர்ந்து வெள்ளையர்களால்
யுத்தம் செய்யஇயலாமல் ஆயுத
பற்றாகுறை வந்தது.

பொருளாதார பிரச்சனையும்
அவர்களுக்கு வந்தது. தொடர்ந்து
அவர்கள் இந்தியாவில் இருப்பது
பற்றி கேள்வி குறியானது
.சுபாஷ்சந்திரபோஸ்
ராணுவத்தோடு நடந்து
கொண்டிருக்கும் சண்டையில்
வெள்ளையர்கள் தோல்வி அடைந்து
கொண்டே வந்தார்கள். இந்த
தோல்வியை அவர்களால் ஒப்பு
கொள்ள முடியவில்லை. அதனால்
வெள்ளையர்கள் இந்தியாவை விட்டு
வெளியேற முடிவு செய்தார்கள். ஆனால் இந்தியா முழுவதும்
சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின்
ராணுவ போராட்டம் தெரியவந்தது. அதனால் காந்தி வழியில் போராடி
கொண்டிருந்தவர்களுள்
பெரும்பாலானோர் சந்திரபோஸ்
அவர்களின் பின்னால் செல்ல
ஆரம்பித்தார்கள். இதனால்
வெள்ளையர்களுக்கு தொடர்ந்து
இந்தியாவில் இருக்க முடியாத
நிலைமை ஏற்ப்பட்டது . ஆயுத
போராட்டத்தை காந்தி அவர்கள்
கடுமையாக எதிர்த்து வந்தார்
சுபாஷ் சந்திர போஸ் மக்களை
தவறான வழியில் கொண்டு
செல்கிறார் என்றும் கூறி வந்தார். காந்தியின் ஆதரவாளர்களால்
சுபாஷ் சந்திரபோஸ் காட்டி
கொடுக்க பட்டார். அவரை கைது
செய்து சிறையில் அடைத்தார்கள்
வெள்ளையர்கள். ஆனால் சிறையில்
வேலை செய்தவர்களின் உதவியுடன்
சுபாஷ் சந்திர போஸ் தப்பித்து
வந்தார். அதன் பிறகு ஆயுத
போராட்டம் கடும் தீவிரம் அடைந்து
வந்ததுவெள்ளையர்கள்
வெளியேறும் நிலைமையும்
வந்தது.

அன்பு நண்பர்களை (இந்த
இடத்தில் கவனிக்க
வேண்டியவைவெள்ளையர்களின்
சூழ்ச்சி) ஆனால் நாங்கள் ராணுவ
ரீதியாக தோற்கடித்து இந்தியாவில்
விரட்டியடிக்க பட்டோம் என்று வந்து
விடக் கூடாது என்பதற்காக . அப்படி
ஒரு அவமானம் வந்து விட கூடாது
என்பதற்காக காந்தியை
நாடினார்கள் வெள்ளையர்கள். வெள்ளையர்கள் அகிம்சை ரீதியாக
போராடும் காந்தியை சந்தித்து
நாங்கள் உங்கள் அகிம்சை
போராட்டத்தால் உங்களுக்கு
சுதந்திரம் கொடுக்க போகிறோம்
நாங்கள் இந்தியாவை விட்டு போக
போகிறோம் என்று சொன்னார்கள்.
காந்தியின் அகிம்சை பெயரை
சொல்லி வெள்ளையன்
இந்தியாவிற்கு சுதந்திரம்
கொடுத்து விட்டு
வெளியேறினான். ஆனால்
தற்போது இந்திய அரசாங்கமும்
இந்திய மக்களும்
சுபாஷ் சந்திரபோஸை மறந்து
விட்டார்கள். அவரின் மகத்தான
போராட்ட வரலாற்றை திட்டமிட்டு
மறைத்து விட்டார்கள். காரணம்
காந்தியின் அகிம்சை போராட்டம்
பாதித்து விடும் இந்த வரலாறு
மறைந்து விடும் என்பதற்காக.

நேதாஜி படையில், 40,000 தமிழர்கள் இருந்தார்கள். வங்காளிகள் அல்ல - பஞ்சாபிகள் அல்ல - மராத்தியர்கள் அல்ல - குஜராத்திகள் அல்ல - ஒரியாக்காரர்கள் அல்ல - எவரும் இல்லை. நேதாஜியின் படையில் 40,000 தமிழர்கள் இருந்தார்கள்.
நேதாஜி அதனால் தான் நான் மீண்டும் பிறந்தால் ஒரு தமிழனாகப் பிறக்க வேண்டும்’ என்று நேதாஜி சொன்னார்.
நேதாஜிகாக தமிழர்கள் உயிர்களைக் கொடுத்தார்கள். துப்பாக்கித் தோட்டாக்களை மார்பில் ஏந்தினார்கள். அந்தப் பட்டாளத்தின் அணிவகுப்புக்கு அடித்தளமாக இருந்தவர், பசும்பொன் தேவர் திருமகனார் என்பதை யாரும் மறந்து விடக்கூடாது.

.

No comments:

Post a Comment