Monday 24 July 2017

மனித வாழ்க்கை தெய்வீகத்தைப் பெறவே-ஸ்ரீதேவர்

"பசும்பொன் தேவர் ஆன்மீகத்தை அடைய வழி என்ன என்பதை விளக்குகிறார்"

நம் ஒவ்வொருவர் வாழ்விலும் வந்துபோகும் இராமாயணமும் மகாபாரதமும்!!!

மனித வாழ்க்கை தெய்வீகத்தைப் பெறுவதற்காகவே என்பதுதான் நாம் கையாண்ட நடைமுறை. அப்படி வருகின்ற போது தெய்வீகத்தைப் பெறுவதற்க்கு இடையூறாக இருப்பவை மூன்று ஆசைகள் அந்த மூவாசையைத்தான் ஞானிகள் இரண்டசாசை என்று சுருக்கினார்கள்.

மண்- பொன்- பெண் என்ற மூன்று ஆசையாக இருந்ததை மண்ணாசையும் பொன்னாசையும் பொருள்தான்.
மண் இருந்தாலும் பொன் கிடைக்கும். பொன் இருந்தாலும் மண் கிடைக்கும். ஆகையால் இரண்டையும் சேர்த்து இதைக் காஞ்சனம் (பொன்)என்று ஒரே வார்த்தையில் முடிக்கலாம்.

பெண் என்ற ஒன்றைக் காமம் என்று வைத்தார்கள். ஆக மூவாசை என்று வைத்த மண் -பொன் - பெண் என்ற மூன்றை காம -காஞ்சனம் என்று இரண்டாகக் குறைத்தார்கள்.

இந்த இரண்டின் மூலமும் வருகின்ற அழிவு என்ன ?
என்பதைக் காட்டுவதற்காக அகில இந்தியாவிற்கும் தெரிவிப்பதற்காக தமிழ்நாட்டில் சிறப்பாக இலக்கியங்களின் ரூபம் காட்டுவதற்காகத் தான் இரண்டு நூல்கள் வந்தன.

காஞ்சனத்தின்  மூலம் அழிந்தவன் துரியோதனன்.
காமத்தின் மூலம் அழிந்தவன் ராவணன்.

காமத்தின் மூலமாக உலகம் என்னிலை பெரும்? என்னிலையை உடையவனும் எப்படிக் கெடுவான்? என்பதைக் காட்டுவதற்க்காகவே இராமாயணம் ஒரு நூலாக வந்தது.

காஞ்சனம் என்ற மண்ணாசையும், பொன்னாசையும் வைத்து பங்காளிக்கு உரியதைக் கொடுக்க மறுக்கும் காஞ்சனம் எப்படி சாம்ராஜ்யங்களை அழிக்கும் என்பதைக் காட்டுவதற்க்காகவே மகாபாரதம் ஒரு நூலாக வந்தது.

அந்த இரண்டு முறையில் சாதாரணமான முறையில் வருகின்றவர்கள் நூலை ஆராய்ச்சி செய்வார்கள் ஆனால் பொறுப்பு வாய்ந்த மேதைகள் அந்த நூலுக்கு ஆதாரமான குறிகோளைக் கவனிப்பார்கள்.

புதையுண்ட ஒன்றைப் பார்ப்பது புத்திசாலியின் கடமை. புறத் தோற்றத்தை பார்ப்பது வீண் வாழ்க்கை வாழ்கின்றவனின் பழக்கம்.
அப்படியுள்ள நிலையில் இந்த இரண்டு நூலும் இரண்டு புதைபட்ட பொருள்களை வைத்து இருக்கின்றன.

இராமாயணம் வைத்திருக்கின்ற புதைப்பட்ட பொருள் தான் வாதிஷ்டம் என்கிற ஞான நூலாகும். அதேபோல மகாபாரதம் வைத்திருக்கின்ற புதைப்பட்ட பொருள் தான் பகவத் கீதை என்கின்ற அதிஞான நூலாகும்.

*மேலே காஞ்சனம் என்பது பொன் என்று பொருள்*

No comments:

Post a Comment