Tuesday 21 November 2017

இனி தக்க பதிலடி கொடுக்கப்படும்

நவரச நாயகன் கார்த்திக் அகில இந்திய பார்வர்ட் பிளாக் தமிழக தலைவராக பொருப்பேற்ற காலத்திலிருந்து நான் இந்த இயக்கத்தில் இருக்கிறேன். அதன்பிறகு தலைமைகள் மாறினாலும் அடியேன் கட்சியை விட்டு மாறவில்லை. நான் தேவர் நேதாஜி எனும் இருபெரும் தலைவர்களின் அ.இ.பார்வர்ட் பிளாக் கட்சியின் தொண்டனே தவிர வேறு எவரையும் கட்சியாக நினைக்கவில்லை. அவ்வபோது எந்த தலைமை உள்ளதோ அவர்களுக்கு உண்மையாக உள்ளேன்.  இப்போது சிலர் கட்சி தலைமையை விமர்சனம் செய்வதும் , வேறு நபர்களை முன்னிருத்து கருத்து தெரிவிப்பதும் கண்டனத்திற்கு உரியது. நான் கட்சியில் சேர்ந்தது முதல் பலரையும் பார்த்துவிட்டேன். எதையாவது சொல்லி நல்லது செய்வதாக நினைத்து இயக்கத்திற்கு கேடுதல் விளைவிப்பவர்களே! எதுவாக இருந்தாலும் என்னிடம் கேளுங்கள் ஒவ்வொருவரை பற்றியும் புட்டு புட்டு வைக்கிறேன்.   கெடுதல் செய்யனும்னு நினைத்தால் நாட்டுக்கு தியாகமே பன்னாத திராவிட கட்சிக்குள் உங்க வேலைய காட்டுங்க. அதைவிட்டு விட்டு தேவர் நேதாஜி எனும் தியாக தலைவர்களின் இயக்கத்திற்கு கெடுதல் செய்யாதீர். இனி பார்வர்ட் பிளாக் கட்சியை பற்றியோ எங்கள் பொதுச்செயளாலர் P.V.கதிரவன் அவர்களை பற்றியோ அவதூறு செய்யாதீர்.  மீறி தொடர்ந்தால்?  வேணாம் நிறுத்திக்கொள்.

முடிந்தால் நீங்கள் கட்சியில் சேர்ந்து செயல்படுங்கள். தலைமை முடிவு சரியில்லை என்றால் 10ஆயிரம் தொண்டர்கள்  சேர்ந்து தலைமையிடம் கேள்வி கேட்போம். ஆயிரக்கணங்கான தொண்டர்கள் தொடர்ந்து கேள்விகேட்டால் எந்த தலைமையும் கவனமாக கட்சி பணி செய்வார்கள். அந்த நிலையை கொண்டு வாருங்கள். ஆனால் கட்சியிலும் சேராமல்,  வேறு கட்சியிலும் , சாதி இயக்கங்களிலும் இருந்துகொண்டு எங்கள் தலைமையை  இனி தக்க பதிலடி கொடுக்கப்படும்.

ஜெய்ஹிந்த்

பூவலிங்கம் மாரி
நாம் இருப்போம் நம் கட்சியில்
அகில இந்திய பார்வர்ட் பிளாக்

No comments:

Post a Comment