Sunday 8 October 2017

நீயாக என்னை நீ மாற்றிடுவாய்

அடித்தாலும் அணைத்தாலும்
உனையன்றித் துணையேது தெய்வமே
நீயே என்றும் அடைக்கலம்
நினதருளே எனக்கு துணைக்கரம்

அருள்விழியாய் எம்மை நோக்குவாய்
பாவங்கள் அனைத்தும் போக்குவாய்

குருவுருவாய் நின்று அருளுவாய்
குறைகள் எல்லாம் அறவே விலக்குவாய்
                                                                                                
மனமென்னும் மாயோனை மாய்த்திடுவாய்
மனமற்ற மனமடைய வழி தருவாய்

தூயவனாய் என்னை ஆக்கிடுவாய் – என்றும்
தூயவனாய் என்னை ஆக்கிடுவாய்
நான் யார் என்று காட்டிடுவாய் – எனக்கு
நான் யார் என்று காட்டிடுவாய்
                                                                                             
நின் அருள்சோதி தனை அடைய
வரம் தருவாய் – நின் அருள்சோதி
தனை அடைய வரம் தருவாய்
நீயாக என்னை நீ மாற்றிடுவாய் .

No comments:

Post a Comment