Friday 27 October 2017

தேவர் மறைவு -இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 'ஜன சக்தி'யில் 30.10.1963 அன்று வெளிந்த
தலையங்கம்:

திரு உ.முத்துராமலிங்கத் தேவர் மறைவு

பழம்பெரும் தேசபக்தர், செழுந்தமிழர்தம்
தீரமிகு தலைவர் பசும்பொன் உ.முத்துரா
மலிங்கத் தேவர் நேற்று செவ்வாய் அதி
காலை 4.30 மணிக்கு மதுரைத் திருநக
ரில் காலமானார் எனும் தீச் செய்தியினை
கேட்டு அளப்பரிய துயரமுற்றோம். திரு. தேவர் அவர்களின் வாழ்க்கை வரலாற் றினை எண்ணுங்கால், மகிமை பொருந்
திய தேச விடுதலைப் போராட்டத்தின் உக்ர நிகழ்ச்சிகள் நினைவுக்கு வருகின்
றன.

1937-ம் ஆண்டில் நடைபெற்ற சென்னை
மாகாண சட்டசபைத் தேர்தலின்போது,
தோழர் ஜீவா, எஸ்.சத்தியமூர்த்தி, மட்டப்
பாரை வெங்கட்ராமைய்யர் ஆகியோரு
டன் சேர்ந்து தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து தேனினுமினிய செந்தமி
ழில், தமிழ் மரபின் வீரத்தோடு, சுதந்திர
ஆவேசமிக்க சொற்பொழிவுகளால் தமிழ் மக்களைத் தட்டியெழுப்பிய போர்வீரர்
தேவர் என்றால் மிகையாகாது.

அத்தேர்தலில்தான் பிரிட்டிஷ் எகாதிபத் திய ஆட்சியாளர்களின் சுமைதாங்கிக
ளாக இருந்துவந்த ஜஸ்டிஸ் கட்சியின் பெரும்  பெருந்தலைகளெல்லாம் உருண்
டன. திரு தேவர் அவர்களும் இராமநாத புரம் ராஜாவை எதிர்த்து காங்கிரஸ் அபே
ட்சகராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
காங்கிரஸ் மந்திரி சபையும் அமைந்தது.

கால் நூற்றாண்டுக்கு முன்,ஏகாதிபத்திய
எதிர்ப்புப் போராட்டத்துடன் கூடவே,தொழி
லாளி வர்க்கப் போராட்டங்களையும் இணைத்து தமிழ்நாடு காங்கிரஸ் சோஷ
லிஸ்ட் கட்சித் தலைவர்கள் ஜீவா, ராமமூர்
த்தி, சீனிவாசராவ், ஏ.எஸ்.கே., இளங்கோ,
முருகேசன் ஆகியோர் நடத்திக் கொண்டி
ருந்த சமயத்தில், சுபாஷ் சந்திர போஸின்
பார்வர்டு பிளாக் கட்சியின் தமிழகத் தலைவர் தேவரும் சேர்ந்து தொழிலாளி
வர்க்கத்தைத் தட்டியெழுப்பினர். அக்கா லத்தில் தேவரின் பார்வர்டு பிளாக் கட்சி
யின் தீவிர உறுப்பினராக மாணவர் மத்தி
யில் போராட்டங்களை நடத்தி வந்தவர்க ளில் தோழர் கே.பாலதண்டாயுதம் ஒருவ ராகும்.

1938-ம் ஆண்டில் மதுரை நகரில் முதல் தடவையாக அரிவாள் சுத்தியல் பொறிக் கப்பட்ட செங்கொடியின் கீழ் பசுமலை மகாலட்சுமி மில் தொழிலானர் சங்கம் தோழர் ஜீவா தலைமை வகித்த கூட்டத் தில் நிறுவப்பட்டபோது, போஸ் கட்சித் தலைவர் திரு முத்துராமலிங்கத் தேவர்
அச்சங்கத்தின் தலைவராகவும், கம்யூனி
ஸ்ட் தலைவர் தோழர் வி. ராமநாதன் பொதுச் செயலாளராகவும் இருந்து வந்த
னர்.

அக்காலத்தில் பசுமலை பஞ்சாலைத் தொழிலாளர்கள் சம்பள உயர்வு கோரி யும், பழிவாங்குதலைக் கண்டித்தும் வேலை நிறுத்தம் செய்தார்கள். கருங்கா லிகளை காரிலேற்றி மில்லுக்குள் கொண்டு சென்றபோது மறியல் போராட்
டமும் நடத்தினர். அப்போது நூற்றுக்கண க்கான ஆண் - பெண் தொழிலாளர்களும்,
தலைர்களும் கைது செய்யப்பட்டு தண் டிக்கப்பட்டனர். தோழர் ஜீவா சப் - இன்ஸ்
பெக்டரால் தாக்குண்டார். அன்று ஆட்சி
பீடத்தில் இருந்த ராஜாஜி மந்திரிசபை
காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான முத்துராமலி ங்கத் தேவரையும் கைதுசெய்து சிறை யில் அடைத்தது.

தேவருடன் கூடவே, தமிழ் மாகாணக் காங் கிரஸ் கமிட்டியின் நிர்வாகக் குழு அங்கத் தினரும், அகில இந்திய காங்கிரஸ் கமி ட்டி அங்கத்தினரும், சென்னை மாகாணத்
தொழிற்ங்கக் காங்கிரஸ் தலைவரும், தமிழ்நாடு காங்கிரஸ் சோஷலிஸ்டு கட்சி
பொதுக் காரியதரிசியும், 'ஜனசக்தி' ஆசி ரியருமான தோழர் ஜீவாவையும் சிறை
யில் அடைத்தனர்.

எல்லா ஜில்லா காங்கிரஸ் கமிட்டிகளும்
தேவரையும் ஜீவாவையும் விடுதலை செய்ய வேண்டுமென்று பெரும் கிளர்ச்சி
செய்ததின் பேரில் சகலரும் விடுவிக்கப் பட்டார்கள். தொழிலாளர்களுக்கு, மகா
ட்சுமி மில் தொழிலாளர்களுக்கு, ஹார்வி
மில் சம்பள அளவும், இரவு போனஸும்
கிடைத்தன. பழிவாங்கப்பட்டவர்கள் திரு ம்பவும் வேலைக்கு எடுத்துக் கொள்ளப்பட்
டனர். லீவு வசதிகளும், பிரசவ அலவன் ஸும் கிடைத்தன.

சுதந்திரப் போராட்டத்திலும், தொழிலாளி
வர்க்கப் போராட்டத்திலும் மட்டுமின்றி,
அக்காலத்தில் கள்ளர் மஹாஜனங்களை
வதைத்துவந்த குற்றப் பரம்பரைச் சட்ட த்தை (சி.டி.ஆக்ட்) எதிர்த்தும் தேவரும்
ஜீவா, ராமமூர்த்தி முதலான தலைவர்க ளும் பெரும் இயக்கம் நடத்தி வெற்றியும்
பெற்றனர்.

1938 இறுதியில் காந்திஜி, ராஜாஜி ஆகி
யோரால் ஆதரிக்கப்பட்ட பட்டாபி சீத்தாரா
மய்யா ஒரு புறமும், இடதுசாரிகளால் ஆத ரிக்கப்பட்ட சுபாஷ் போஸ் மறுபுறமும் காங்கிரஸ் மகாசபையின் தலைமைப் பத
விக்குப் போட்டியிட்ட காலத்தில், தேவரும்
கம்யூனிஸ்டுகளும் சோலிஸ்டுகளும் திரி
புரா காங்கிரஸ் சென்று சுபாஷ் பாபுவை
வெற்றிபெறச் செய்தார்கள்.

1939 செப்டம்பரில் மஹாயுத்தம் ஆரம்பித் தபோது தேவரும் எல்லா இடதுசாரித் தலைவர்களும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்க ளால் பாதுகாப்புச் சிறைகளிலே அடைக்க
ப்பட்டு 4,5 ஆண்டுகள் சிறையிலே வாடி னர்.

உடல்நலக் குறைவால் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று
வந்தும்கூட, அவரைக் காப்பாற்ற இயல
வில்லை. அவரது மறைவினால் துயருற்
றுக் கிடக்கும் அவரது உறவினர்களுக்கும்
இதரர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

No comments:

Post a Comment