Tuesday 24 October 2017

அதிர்ந்து குழு மட்டுமல்ல நேருவும்தான

10 வருடங்கள் கழித்து அமைக்கப்பட்ட நேதாஜி "மர்ம மரண விசாரனைக்குழு" தேவரை விசாரிக்க அழைக்கிறது.

விசாரணைக்கு வந்த தேவர் அக்குழுவினரிடம் மூன்று கேள்வி மட்டுமே கேட்டார் அவை பின்வருமாறு.

1.) நேதாஜி மர்ம மறைவு குறித்து விசாரிக்க இந்த விசாரணைக்குழு ஜப்பான் நாட்டைவிடுத்து மற்ற நாடுகளுக்கு பயணம் செய்ய உத்தேசித்துள்ளதா?

இதற்கு சரிவர அவர்களிடம் பதில் இல்லை

2.) இக்குழுவிற்கு தலைவராக ஷாநவாஸ்கானுக்கு பதிலாக உயர்நீதிமன்ற அல்லது உச்சநீதிமன்ற நீதிபதியை தலைவராகியிருக்கலாம் அல்லது போர்க் குற்றவாளிகளின் விசாரணை ஆணையத்தின் தலைவராக இருந்த இராதாவினோத்பாலை தலைவராக நியமனம் செய்திருக்களாமே?

பதில்- இராதாவினோத்பால் நேதாஜி இறக்கவில்லை.எந்தவிதமான வானூர்தி விபத்தும் நிகழவில்லை என்றும் அறிவித்து விட்டார் அதனால் அவரை இக்குழுவிற்கு தலைவராக நியமிக்க சாத்தியமில்லை என்றார்கள்.

உடனே தேவர்- அப்படியானால் அவரை ஏன் நீங்கள் விசாரிக்கவில்லை.

குழு- நாங்கள் கல்காத்தா சென்று அவரை விசாரிக்க திட்டமிட்டுள்ளோம் என்றார்கள்.

சரி

3.) சுபாஸ் சந்திரபோஸின் பெயர் இங்கிலாந்து வெளியிட்ட சர்வதேச போர்க் குற்றவாளிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா? இல்லையென்றால் அதற்கான முறையான அறிக்கையை வெளியிட இந்திய அரசு தயாராக இருக்கிறதா?

குழு சிறிது நேரம்  மெளனம்

பதில்- நாங்கள் வெறும் விசாரணைக்குழுதான் அரசிடம் பேசிவிட்டு உங்களுக்கு சொல்கிறோம். அதுவரை தனி அறையில் ஓய்வெடுங்கள் என்று கூறி ஓடியது.

நீண்டநேர இடைவெளிக்குப் பின் வந்த குழு அரசிடமிருந்து இது சம்பந்தமான பதில்கள் எதையும் பெற இயலவில்லை என்றனர்.ஏன் என்று தேவர் கேட்டபோது இது சம்பந்தமான எந்த கோப்புகளும் அரசிடம் இல்லை என்றார்கள்.

தேவர்- அப்படியென்றால் சுதந்திர இந்திய அரசு போஸ் போர்க் குற்றவாளி இல்லையென்ற அறிக்கையை ஏன் கொடுக்கக் கூடாது? என கேட்டார்.

குழு- இதுபோன்ற கேள்விகளைக் கேட்டால் நாங்கள் எப்படி விசாரணையை தொடர்வது.

தேவர்- நான் நேதாஜியின் இயக்கத்தை சேர்ந்தவன் நேதாஜி போர்க் குற்றவாளியில்லையென்று அறிவிக்கும் வரை இந்த குழுவோடு ஒத்துழைக்க முடியாது உங்களால் முடிந்ததை பாருங்கள்.

அதிர்ந்து குழு மட்டுமல்ல நேருவும்தான்.

பதிவு- நிவேதா 23.10.2017

No comments:

Post a Comment