Saturday 7 October 2017

திருநகர் தேவர் வாழ்ந்த வீட்டை நினைவு இல்லமாக மாற்றுவது எப்போது?

  2012ம் ஆண்டு தேவர் ஜெயந்தியின் போது தடையுத்தரவு என்ற பெயரில் போலீஸார் ஏகப்பட்ட கெடுபிடிகளை செய்துவிட்டார்கள். 12 ஆயிரம் பேர் மீது வழக்குப் போட்டுள்ளனர். தென்மாவட்டங்களில் 34 சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றியை தீர்மானிக்கும் இடத்தில் தேவர் சமுதாயம் இருக்கிறது. இது தெரிந்துதான் அவர்களை சமாதானப்படுத்த வருகிறார். தேவருக்கு தங்கக் கவசம் அணிவித்தால் மட்டும் அதிருப்தி மறைந்துவிடுமா?

கமுதியில் உள்ள தேவர் கல்லூரியை அரசு ஏற்று 27 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், இதுவரை அந்தக் கல்லூரி எந்த வளர்ச்சியும் பெறவில்லை. மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் 1995-ல் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஆய்வு மையத்தை ஜெயலலிதா அமைத்தார். அது இன்றுவரை டிபார்ட்மென்டாக உயர்த்தப்படவில்லை. 2005-ல் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, திருமங்கலத்தில் தேவர் வாழ்ந்த வீட்டை நினைவு இல்லமாக மாற்ற 22.16 லட்சம் நிதி ஒதுக்கினார்.

இன்றுவரை நினைவு இல்லம் கனவு இல்லமாகவே இருக்கிறது. இதில் உள்ள தடைகளை தகர்த்தெறிந்து நினைவு இல்லப் பணியை விரைவாக தொடங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தேவரின மக்களிடம் உள்ளது.

‘தி இந்து’விடம் அகில  ஃபார்வர்டு பிளாக் கட்சியின் செயல் தலைவர் நவமணி கூறிய பேட்டி.

**************************************

மேலும் சில தகவல்

தேவர்  இறுதிக்காலத்தில் வாழ்ந்த திருநகர்  இல்லம் நினைவு இல்லமாக  அறிவித்து  2005 ல் நிதி ஒதுக்கீடோடுநடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது.  2006  திமுக ஆட்சியின் போது  அந்த  இல்லத்தில் இயங்கிவரும்  இந்திராகாந்தி மெமோரியல் மெட்ரிக் பள்ளி நிர்வாகம் அரசு ஆணை யை எதிர்த்து  உயர்நீதி மன்றத்தில் வழக்குத்தொடுத்தது. நீதிபதி சந்துரு நல்லதொரு நீதி வழங்கினார். பள்ளி நிர்வாகம் ஏற்கவில்லை மேல்முறையீடு செய்தது. நீதிபதி  பி.டீ.தினகரன் சமாதான நடவடிக்கையில் ஈடுபட்டார். பள்ளியின் மொத்த  இடத்தையும் ஒப்படைக்க வேண்டும். 49 செண்டிற்கு பதிலாக திருநகர் பகுதியிலேயே  இரண்டரை ஏக்கர் நிலம் தமிழ்நாடு அரசு வழங்கும் அதில்  தேவர்  அறக்கட்டளை தலைவர் வாலைத்தேவர் பொறுப்பில்  பள்ளிக்குரிய சுமார் பத்தொன்பதாயிரம் சதுர  அடி கட்டிடத்தை கட்டித்தருவது என்று பேசினார். நிர்வாகம் ஏற்கவில்லை. மேல்முறையீடு செய்தது. வழக்கு நிலுவையிலுள்ளது. இதற்காக வழக்காடிய திரு. வாலைத்தேவர்  இறந்துவிட்டார். அவர் இருந்தவரை அவரோடுநானும் நீதிமன்றம் சென்று வந்தேன்.- நவமணி ஐயா

No comments:

Post a Comment