Wednesday 21 June 2017

ஆசிய யோகா போட்டியில் வெள்ளி பசும்பொன்னில் பாராட்டு

பசும்பொன்னில் பாராட்டு ஆசிய யோகா போட்டியில் வெள்ளி வென்ற மீனாட்சிக்கு

தாய்லாந்தில் நடைபெற்ற முதலாவது ஏசியா-பசுபிக் யோகா சாம்பியன்ஷிப் போட்டியில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.
தாய்லாந்தில் மே 17,18,19 தேதிகளில் இப்போட்டிகள் நடைபெற்றன. இதில் சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, இந்தியா உள்பட 6  நாடுகளிலிருந்து 250 பேர் கலந்து கொண்டனர். இந்தியாவிலிருந்து போட்டியில் பங்கேற்ற 30 பேரில், ராமநாதபுரம் பசும்பொன் அருகே உள்ள பொசுக்குடி மாணவி காமாட்சியும் ஒருவர். இவர், இரண்டு பிரிவாக நடைபெற்ற போட்டியில் இரண்டிலுமே 2-ஆம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இவருக்கு பசும்பொன் ஸ்ரீதேவர் ஆலயத்தில் நடைபெற்ற உலக யோகா தினம் நிகழ்ச்சியில் பாராட்டு விழா நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான ஸ்ரீதேவர் பக்தர்கள் தேவர் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment