Thursday 23 November 2023

வைகையின் பூர்வீக ஆயக்கட்டு பகுதி இராமநாதபுரம்

வைகை பூர்வீக ஆயகட்டு பகுதி இராமநாதபுரத்திற்கு தண்ணீர் திறப்பு. 

  வைகை அணை கட்டியதால் 100% பாதிப்பு இராமநாதபுரம் மாவட்டத்திற்கு தான். ஏனென்றால் வைகை நதியை கடலில் கலக்க விடாத அளவிற்கு இராமநாதபுரம் சேதுபதி மன்னர்களால் பலநூறு கண்மாய்கள் பாராமரித்து மக்களின் விவசாயத்திற்கு பயன்படுத்தி வந்தனர். அதுவும் பத்தாது என கேரளா மாநிலத்தில் அரபிக்கடலில் வீனாக கலந்து வந்த முல்லை எனும் ஆற்றையும் பெரிய ஆறு எனும் இரண்டு ஆறுகளைகளையும் தமிழகத்திற்கு திருப்பி  இரண்டு ஆறுகளின் பெயரையும் ஒன்றாக்கி முல்லைப்பெரியாறு எனும் அணை கட்டும் திட்டத்தை உருவாக்கினார் சேதுபதி மன்னர். அது மன்னரால் ஆரம்ப பணிகள் துவங்கினாலும் முடியாமல் போக பின்னாலில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நிறைவேறியது. இராமநாதபுரம் பெரும் பலன் பெற்றது.

ஆனால் பாருங்கள் சுதந்திர இந்தியா உருவான சில ஆண்டுகளிலேயே வைகை அணை எனும் பெயரால்  இராமநாதபுரம் மாவட்ட ( ஒன்றுபட்ட இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் சேர்ந்தது) மக்களின் உரிமைகள் நாசமானது. வைகை நதிக்கு அணையே தேவையில்லை. ஏனென்றால் அது நேரடியாக கடலில் கலப்பதே இல்லை. வரலாறு காணத வெள்ளம் வந்தால் தான் கண்மாய்கள் நிறைந்து தத்துகள்  வழியாக நீர் வெளியேறி கடலுக்கு என்றாவது செல்லும். அந்த அளவிற்கு இராமநாதபுரத்தில் வழிமுறைகளை கண்மாய்கள் மூலம் செய்து இருந்தார்கள். ஆனால் ஏதோ ஒரு தேவைக்காக அன்றைய அரசு அணை கட்டியது.

ஆனால் வைகை கட்டும் போதே உரிமைகளை விட மறுத்து அப்போதைய அமைச்சராக இருந்த இராமநாதபுரம் மன்னர் சண்முக ராஜேஸ்வர நாகநாத சேதுபதி அவர்கள் இராமநாதபுரம் பகுதிதான் வைகை அணையின் பூர்விக பயன்பாட்டு பகுதி எனும் உரிமையை பதிவு செய்ததோடு இராமநாதபுரம் மாவட்ட அனுமதியோடு தான் அனையில் நீர் திறப்பு சம்பந்தப்பட்ட அனைத்து நடைமுறையும் இருக்க வேண்டும் என பல விதிகளை அன்றைய அரசை ஏற்க வைத்தார்.  

ஆனால் அணை கட்டப்பட்ட பின்பு. இராமநாதபுரத்தில் வறட்சி கோரத்தாண்டவம் ஆட துவங்கியது. இராமநாதபுரம் நெற்களஞ்சியம் என போற்றப்பட்ட பெரிய கண்மாய் கொண்ட R.S.மங்களம் வறண்டது. குண்டாறு மலட்டாறு நீர் பிடிப்பு நீர்களும் வைகைநோக்கி போனதால் ஆப்பநாடு வரண்டது. ஆப்பநாடு வறட்சியில் தாங்க முடியால் 40% முதல் சில பகுதியில் 100% வரை இடம்பெயர்ந்து பிழைக்க மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு நிரந்தரமாக புலம் பெயர்ந்தார்கள். பெரிய கண்மாய்கள் கருவேலங்காடாக மாறியது. 

ஒரு உண்மை தெரியுமா தமிழ்நாட்டிலேயே 100ஏக்கருக்கும் அதிகமான பெரிய கண்மாய்கள் கொண்ட மாவட்டம் இராமநாதபுரம் மாவட்டம் தான். ஆனால் வைகை அணையால் கண்மாய்கள் கருவேலங்காடாக போனது. 

வைகை அணை நிறைந்தால் அவ்வபோது அன்றைக்கு எழுதப்பட்ட விதிகளின் பலனால் ஏன்றோ தண்ணீர் திறக்கப்படுகிறது. ஆனாலும் வந்து சேருகிறதா?  வந்தாலும் ஒழுங்காய் கால்வாய்கள் மூலமாக கண்மாய்களை நிரப்ப முடிகிறதா என்றால் இல்லை. 

இனியாவது அதை முறைப்படுத்த வேண்டும் அனைத்து கண்மாய்களுக்கும் நீர் சென்று சேர வேண்டும்.

No comments:

Post a Comment