Tuesday 9 December 2014

தேவரே தெய்வம்

ஸ்ரீ பசும்பொன்னாரே தெய்வம்:-

கருவேலங்காட்டு மண்ணில் சந்தனமாய் பிறந்தவரே!
நெறிஞ்சிமுள்ளு பூமியிலே குறிஞ்சிய போல் பூத்தவரே!
எங்கராசா பசும்பொன் தங்கராசா!
எங்கராசா பசும்பொன் தங்கராசா!
பாலைவன தேசத்துல பால்மழையா பொழிஞ்சவரே!
உத்தமி இந்திராணி கருவரையில் உதித்தவரே!
இசுலாமு தாய்மார்பில் முதல் பாசம் அறிஞ்சவரே!
ஆண்டவன் மகன் போல வந்தீர!
நாங்க வாழவே புதுபாதை தந்தீரே!
தெற்குதெசை தேசத்துல சூரியனாய் உதிச்சவரே!
மண்ணாலும் வம்சத்துல மனசால பிறந்தவரே!
எங்கராசா பசும்பொன் தங்கராசா!
எங்கராசா பசும்பொன் தங்கராசா!
கைரேகை தீர்போழிக்க கையெழுத்து தந்தவரே!
பாட்டாளி இனத்துக்கெல்லாம் படிப்பறிவை கொடுத்தவரே!
சாதி மத பிரிவொழிக்க சபைநடுவே சொன்னவரே!
ஆண்டவன் மகன் போல வந்தீரே!
நாங்க வாழவே புதுபாதை தந்தீரே!
கலவரப்பேயொன்னு காலநிலை மாத்திடுச்சே!
அழிவில்லா ஆதவன அரசியலும் சாய்த்திடுச்சே!
சிலம்பத்துல வல்லவர சிலந்திவலை சுத்திடுச்சே!
உம் உழைப்பில் வளர்ந்த கட்சி உங்க உசுற திண்ணிடுச்சே!
நாடாள பிறந்த உம்மை நயவஞ்சகம் கொண்ணுடுச்சே!
மரணம் உமக்கென்றும் வாராது!
உங்க புகழோ பூமேலே பன்னீரு!
மரணம் உமக்கென்றும் வாராது!
உங்க புகழோ பூமேலே பன்னீரு.

எவனுக்கும் ஏன் அந்த எமனுக்கும் மண்டியிடாத மரணம் அடியேனுக்கு வேண்டும்.
பசும்பொன்னே கோவில்!ஸ்ரீலஸ்ரீ பசும்பொன்னாரே தெய்வம்.

No comments:

Post a Comment