Wednesday 30 August 2017

ஸ்ரீ தேசிய மூர்த்தி சுவாமிகள் ஜீவசமாதி

திருச்செந்தூர் முருகன் ஆலய ராஜகோபுரம் கட்டிய ஞான ஸ்ரீ தேசிய மூர்த்தி சுவாமிகள்.

""""""""""""""""""""""""#ராஜகோபுரம்""""""""""""""""""""""""
137 அடி உயரமும், 9 நிலைகளையும் கொண்ட ராஜ கோபுரத்தைக் கட்டியவர் திருவாவடுதுறை ஆதீனத்தைச் சேர்ந்த தேசிக மூர்த்தி சுவாமிகள். இவரை ஒடுக்கத்தம்பிரான் என்றும் கூறுவர். கோபுரம் கட்டும்போது பணியாளர்களுக்கு கூலியாக இலை விபூதி தருவார். தூண்டு கை விநாயகர் கோயிலருகில் சென்று இலையைப் பிரித்துப் பார்த்தால், அதில் வேலைக்குரிய கூலி இருக்குமாம்! ஒரு நாள் இந்த அதிசயம் நடப்பது நின்று போனது. தேசிக சுவாமிகள் முருகனிடம் முறையிட்டார். அவரது கனவில் தோன்றிய முருகன், ‘‘காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதியிடம் சென்று உதவி பெற்று கோபுரத்தைக் கட்டி முடி!’’ என்றார். சுவாமிகள் சீதக்காதியைச் சந்தித்தார். அவர் ஒரு மூட்டை உப்பு கொடுத்தார். அதைக் கோயிலுக்குக் கொண்டு வந்து பிரித்துப் பார்த்தபோது தங்கக் காசுகளாக மாறிவிட்டிருந்தன. கோபுர வேலை இனிதே முடிந்தது.

திருச்செந்தூரில் முருகன் சன்னதியின் மேற்கு திசையில் ராஜகோபுரம் இருக்கிறது.
கோபுரம், யாளி மண்டபத்துக்கு மேல் 137 அடி உயரமும், 90 அடி நீளமும், 65 அடி அகலத்துடனும் திகழ்கிறது. இதன் ஒன்பதாவது மாடத்தில் கடிகார மாளிகை இருக்கிறது. முருகப்பெருமான் இத்தலத்தில் கடலை பார்த்தபடி, கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். பிரதான கோபுரம் சுவாமிக்கு எதிரே, அதாவது கிழக்கு திசையில்தான் அமைத்திருக்க வேண்டும். ஆனால், அப்பகுதியில் கடல் இருப்பதால் மேற்கில் கோபுரம் கட்டப்பட்டுள்ளது. முருகன் மூலஸ்தானத்தின் பீடத்தைவிட, இக்கோபுர வாசல் உயரமாக இருப்பதால், எப்போதும் அடைக்கப்பட்டே இருக்கிறது. கந்தசஷ்டி விழாவில் முருகன் திருக்கல்யாணத்தின்போது நள்ளிரவில் ஒரு நாள் மட்டும் இந்த வாசல் திறக்கப்படும். அவ்வேளையில் பக்தர்கள் உள்ளே செல்ல அனுமதி கிடையாது.

இவர் தனது இறுதிகாலத்தில் தான் செய்ய வேண்டிய தெய்வ தொண்டு நிறைவுபெற்றுவிட்டது. அதனால் ஜீவசமாதி ஆவதாக கூறி இடத்தை தேர்வு செய்தார் . தான் ஜீவசமாதியில் இறங்கி யோக நிலையில் அமர்ந்த உடன் மேலே உள்ள கல்லை மூடுமாறு கூறிவிட்டு அமர்ந்தார். ஆனால் உயிருடன் இருக்கும் போது மூட மனமில்லாமல் தலை சாயும் வரை காந்திருந்து பின்பு மூடினர். இவரின் ஞான ஜீவசமாதி ஆழ்வார்தோப்பு தாமிரபரணி கரையோரத்தில் உள்ள காந்தீஸ்வரம் ஆலயத்தின் பின்புறம் உள்ளது.

ஜீவசமாதியில் நான் எடுத்த புகைப்படம் முதல் கமாண்டில் உள்ளது.




2 comments:

  1. திருக்கோயில் பூசாரி /குருக்கள் / சிவாச்சாரியார் தொடர்பு எண் இருந்தால் தரவும் !

    ReplyDelete
  2. சரியான அருமையான பதிவு.

    ReplyDelete