Thursday 17 August 2017

குலசேகரபட்டினம்


முத்தாரம்மன் கோவில்
குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவில் என்பது தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள சக்தி தலமாகும். இது திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலுடன் இணைந்த கோவிலாகும். இந்த தலம் திருநெல்வேலியிலிருந்து 65 கி.மீ தொலைவிலும் தூத்துக்குடியிலிருந்து 55 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் நவராத்திரி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்தத் திருவிழாவை வட்டார வழக்கில் தசரா என்று அழைக்கின்றனர்.

தசரா

மகிசாசூரன் என்ற அசுரனை அன்னை பராசக்தி வதம் செய்து தேவர்களை காத்த நாளினையே தசராவாக கொண்டாடுகின்றனர். நவராத்திரியின் ஒன்பது நாளிலும் பக்தர்கள் விரதம் இருந்து அம்மனுக்கு மாலை சூடி வேடமணிந்து பரவசமாக ஆடியும் பாடியும் பக்தர்களிடம் காணிக்கை பெறுகின்றனர். பத்தாம் நாளில் சூரசம்காரம் வெகு விமரிசையாக நடைபெருகிறது. அத்துடன் பக்தர்கள் மாலையினை கழற்றி விரதத்தினை முடித்துக்கொள்கின்றனர்.

அமைவிடம்

திருச்செந்தூரிலிருந்து கன்னியாகுமரி செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் திருச்செந்தூரிலிருந்து 23 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது

No comments:

Post a Comment