Wednesday, 27 November 2024

தேவர் மீடியா ஆண்டு விழா

2016 ஆண்டிலிருந்து தேவர் மீடியா Facebook ல் செயல்படுகிறது. அதன் பிறகு கொஞ்ச காலம் கழித்து Youtube ல் ஆரம்பித்தோம். அதன் பிறகு  Website ஆரம்பிங்க முடிவு செய்தோம். அப்போது Thevarmedia.com எனப் டொமைன் நேம் தேர்வு செய்தோம். அப்போது வெப்சைட்டின் About பகுதியில் தேவர் மீடியாவின் வரலாறு நோக்கம் பற்றி பதிவு செய்ய வேண்டும் நீங்கள் எழுதி தாங்கனு சொன்னபோது.  நான் தான் தேவர் மீடியா துவங்க காரணம் என்ன, நோக்கம் என்ன, செயல்பாடுகள் என்ன என எழுதினேன். அப்படி எழுதிய போது தேவர் மீடியாவிற்கு என துவக்க நாளும் தேவைப்பட்டது. நானே அதற்கென ஒரு தினத்தை தேர்வு செய்தேன். அதுதான் 2016 ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி.

 அதே தேதியில் இம்மானுவேல் நினைவு நாள், பாரதியார் நினைவு நாள் என சில நிகழ்வு தினமாக இருத்தது. உண்மையில் அந்த தேதியில் தான் தேவர் மீடியா துவங்கப்பட்டதா என்றால் அதுவும் இல்லை.  பிறகு ஏன்?

தேவர் மீடியாவில் நான் முதன்முதலாக பதிவு போட்ட தினம் அது. எனது முதல் பதிவு தினத்தையே தேவர் மீடியாவின் துவக்க தினமாக தேர்வு செய்தேன். அந்த தினமே இப்போதும் தேவர் மீடியா ஆண்டு விழாவாக கொண்டாடப்படுகிறது. (எனது முதல் பதிவு தினம்) 


ஆண்டு விழா புகைப்படம்

நான்கு ஆண்டுகளுக்கு பிறகே தேவர் மீடியாவுக்கு ஆண்டு விழா என தனி விழாவாக நாம் முதன்முதலாக கொண்டாட ஆரம்பித்தோம். 

Thursday, 21 November 2024

லலிதா ஜூவல்லரி நிறுவனர் மாறிய கதை.

லலிதா ஜூவல்லரி நிறுவனர் மாறிய கதை.
சென்னையில் நீண்ட காலமாக செயல்படும் ஒரு நகைக்கடை லலிதா ஜுவல்லரி (Lalitha Jewellery).  அந்தக்கடையை ஒரு வயதான நபர் நடத்தி வந்தார்.  அப்போ வடநாட்டிலிருந்து ஒரு வியாபாரி தோடு உள்ளிட்ட நகைகளை செய்து வந்து மொத்த வியாபாரமாக சென்னைக்கு வந்து லலிதா ஜுவல்லரி உள்ளிட்ட பல கடைக்களுக்கு மொத்த விலையில் விற்பனை செய்து வந்தார். அப்படி விற்பனை செய்து வந்த வடநாட்டு வியாபாரி லலிதா ஜுவல்லரி முதலாளியிடம் வியாபாரம் தொடர்பாக ஆலோசனைகளை ஆர்வமாகவும் அக்கரையோடும் பேசுவார். அந்த வடநாட்டு வியாபாரியை லலிதா ஜூவல்லரி ஓனர் பெரியவருக்கு பிடித்து போனது. அவரிடம் நன்றாக பெரியவர் பேசுவார். அப்போது பெரியவர் தனது கஷ்ட நிலையை வடநாட்டவரிடம் கூறியுள்ளார். அந்த லலிதா ஜூவல்லரி ஓனருக்கு நிறைய கடன் இருந்துள்ளது. வயதானதால் கடையையும் சரியாக கவனிக்க முடியவில்லை . இதுபற்றி வடநாட்டு வியாபாரிடம்  என்ன செய்வது என கவலையாய் கூறியுள்ளார். 

அதை கேட்ட அந்த வடநாட்டு வியாபாரி அந்த பெரியவருக்கு உதவும் வகையில், சரி உங்க கடையை பெரிய தொகை கொடுத்து நானே வாங்கி கொள்கிறேன். அந்த தொகையின் ஒரு பகுதியை வைத்து கடனையும் அடைத்து விடலாம். நீங்கள் கடைசி காலத்தில் ஓய்வெடுங்கள் என பேசி முடித்து  கடை வடநாட்டு வியாபாரியிடம் வசம் வந்தது. 

இந்த வடநாட்டு வியாபாரி வாடிக்கையாளர் தேவை அறித்து புதிய மாடல் நகைகளை அளிமுகம் செய்தார். அதுவும் மிகக்குறையில் விலையில். மக்களை கவரும் விளம்பரம் செய்தார். கடையில் தினந்தோறும் கூட்டம் கூடியது. பல ஆண்டுகள் கடினமாக உழைத்தார். பழைய கடையை இடித்து பிரம்மாண்ட கடையாக மாற்றினார். கடனில் ஓடிய கடை இப்போது வடநாட்டவரின் உழைப்பால் பல மடங்கு லாபத்தில் இயங்க துவங்கியது. லலிதா ஜூவல்லரி தமிழத்தின் பிரபலமான நிறுவனமாக மாறியது. 

இந்த நிலையில் பழைய ஓனரின் உறவினர்கள் மூலமாக புது பிரச்சனை வந்தது. LALITHA JEWELLERY எனும் பெயர் எங்களுக்கு சொந்தமானது. அதை பயன்படுத்த கூடாது. நாங்கள் அதே பெயரில் கடை கடத்த போகிறோம் என்றார்கள். இதை கேட்டதும் அந்த வடநாட்டவர் துடித்துப்போனார். கையில் காசு பணம் நிறைய இருக்கு வேறு எங்கு கடையை மாற்றினாலும் கடை சிறப்பாக தான் நடக்கும் ஏனென்றால் அந்த பெரியவர் காலத்து லலிதா இல்லை இது. இது அந்த வடநாட்டான் உழைப்பால் வந்த புகழ்பெற்ற பிராண்டடு நேம் லலிதா. அந்த அளவிற்கு வடநாட்டவர் உழைப்பாள் லலிதா எனும் பெயர் புகழ்பெற்றது. அப்படிப்பட்ட பெயரை இழக்க விரும்பவில்லை ஏனென்றால் அது தான் அந்த வடநாட்டவரின் உழைப்பின் அடையாளம். காசு பணத்தை திருடினால் கூட கவலையில்லை ஆனால் ஒவரின் உழைப்பை திருடுவது பெரும் கொடுமை. 

ஆழ்ந்து யோசித்தார் அந்த வடநாட்டவர். நமது அடையாளத்தை இழக்க கூடாது. அதே நேரத்தில் சட்ட சிக்கலிலும் இல்லாமல் தனது லலிதா நிறுவனத்தை நடத்தவும் வேண்டும். 

அவர் எடுத்த முடிவு என்ன தெரியுமா? 
LALITHA எனும் பெயரை LALITHAA என மாற்றி விட்டார். 

தனது கடின உழைப்பை தொடர்ந்தார்.  இன்று தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் பல கிளைகளோடு பறந்து வளர்ந்தது.

அந்த வடநாட்டவர் தான் இன்றைய LALITHAA JEWELLERY நிறுவனர் கிரேன்குமார்.

Sunday, 17 November 2024

சடையாண்டி

#மாற்று_சமூகத்தில்_இப்படி_ஒருத்தர்_இருந்தால்_கோபுரத்தில்_தூக்கி_வைத்து_கொண்டாடியிருப்பார்கள்

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்  திருமகனாரின் திருத்தொண்டர், எத்தனையோ கோடீஸ்வர தேவரின தலைவர்கள் இருக்கிறார்கள் நினைத்தால் ஒரு சேனல் உருவாக்கி இருக்கலாம் தலைவர்கள் எல்லாம் பணத்தால் மட்டுமே உயர்ந்தவர்கள் குணத்தால் அல்ல , ஆனால் பேரன்பு கொண்ட மச்சான் திரு Sadaiyandi Puregold Sms  அவர்கள் எப்போதும் உள்ளத்தால் உயர்ந்தவர் தனது பணிகளை விட்டுவிட்டு எந்த ஊர்களானலும் சரி எந்த தலைவர்கள் ஆனாலும் சரி தேவர் என்ற ஒரு சக்திக்காக தேவர் மீடியா என வலைதள தொலைக்காட்சியை உருவாக்கி கிராமம் வாரியாக லட்சோப லட்சம் மக்களுக்கு கொண்டு சேர்த்திருக்கிறார்,சமூகத்திற்கும்,தேவர் மீடியாவுக்கும் துளியளவும் உதவி செய்யாதவர்கள் கூட ஒரு பதிவு மீடியாவில் சசிகலாவுக்கு ஆதரவாக,டிடிவிக்கு ஆதரவாக,ஓபிஎஸ் சுக்கு ஆதராவாக வந்துவிட்டால் போதும் புரட்சி போராளி ஆகி விமர்சிக்க ஆரம்பித்துவிடுவார்கள், தேவர் மீடியாவை பார்த்து ஆரம்பித்த மாற்று சமூகத்தினர் அவர்களுக்கு பிடித்த பெயர்களில் மீடியா ஆரம்பித்து அதிக சப்ஸ்கிரைபர்களை உருவாக்கி அவர்கள் சமூகத்தினரிடம் வசூல் வேட்டையில் இறங்கி செழிப்புடன் மீடியா நடத்துகிறார்கள், ஆனால் எவ்வித எதிர்பார்ப்புமின்றி வெளிநாடுகளில்,வெளி மாநிலங்களில் வசிக்கும் தேவர் திருமகனாரின் தொண்டர்களுக்காக பசும்பொன்னிலும்,கோரிப்பாளையத்திலும்,ஒவ்வொரு சமூக நிகழ்வுகளையும் நேரலையில் கொண்டு சேர்த்திருக்கிறார், கீழத்தூவல் காவல்துறையினரால் துன்புறுத்தி படுகொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவர் மணிகண்டன் மரண சம்பவத்தை கடைசி வரை பதிவு செய்து ஊடகங்கள்,பல சமூக தலைவர்களின் கவனத்தை ஈர்த்தவர் எப்போதும் சாந்தமாகவே இவரை பார்த்த நான் மக்கள் கூட்டம் முன் ஆக்ரோஷத்துடன் அதிகாரிகளிடம் சண்டையிட்டதை பார்த்து வியந்தேன், இராமநாதபுரம் சேதுநாட்டு மன்னர் குமரன் சேதுபதி அவர்களின் தீவிர விசுவாசி,மன்னர் காலமான பின் முடிசூட்டிய இளைய மன்னர் திரு நாகேந்திர சேதுபதி அவர்களை மக்களின் முன் பிரகாசிக்க செய்தவர், நேதாஜி,முத்துராமலிங்கத்தேவர்,மூக்கையாதேவர்,சசிவர்ண தேவர்,பெருமாள் தேவர்,குருசாமி பிள்ளை,சோலை குடும்பர்,மொக்கையன் அருந்ததியர் ,ஆண்டித்தேவர் கட்டிக்காத்த அகில இந்திய பார்வர்ட் பிளாக் இயக்கத்தை காக்க ஸ்ரீவை சுரேஷ் தேவர் அவர்களின் தலைமையேற்று பணியாற்றும் தேச பக்தர்,முக்குலத்தோர் எழுச்சி கழகம் பொதுச்செயலாளர் அண்ணன் விஆர்கே.கவிக்குமார் அவர்களின் அன்பிற்கு கட்டுபட்டவர் ,இப்பேற்பட்டவர் நமது சமூகத்தின் பொக்கிஷம் ,இனி வரும் காலங்களில் தேவர் மீடியா நல்ல முறையில் பிரம்மாண்டமாக வளரவும்,மகிழ்வோடு பல்லாண்டு காலம் நலமுடன் வாழ தேவர் திருமகனாரை வேண்டிக்கொண்டு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்..❤

இரா.பசும்பொன் ராஜா, 
மாவட்ட இளைஞரணி செயலாளர்,
முக்குலத்தோர் எழுச்சி கழகம் மதுரை மாநகர் .

Saturday, 16 November 2024

முக்குலத்தோர் இலவசக் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு அறக்கட்டளையின் பாராட்டு விழா புகைப்படங்கள்

முக்குலத்தோர் இலவசக் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு அறக்கட்டளையின் பாராட்டு விழா புகைப்படங்கள்
xbL6fX6ehJ3-3t3MylNNyerSvbmZ73nFPIzA/s1600/1001273213.jpg"/>
src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgbf0Smyot9UBBVlU9g3J24reAHSv2-eGrzNmXHruZKTHRbx7qHGShxtuld_Az3-n17U4Y3Cfio_j-tCIyLPBvDRxShFLJDymIzakI4upIB2UMtbFM8aVVJPRm33XcopPOvb9lHMw73jlCqFGeoQCxOwYMIsUA6wzCUvwJKwXiGqHYFpm4XKYnmArDdw7E/s1600/1001273376.jpg"/>